தங்கம் சேர மல்லிகை பரிகாரம்

mahalakshmi gold
- Advertisement -

தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. நகை இருப்பவர்கள் மேலும் சேர்க்க விரும்புவார்கள். இல்லாதவர்கள் சிறிதளவு தங்கத்தையாவது சேர்க்க வேண்டும் என்று ஏங்குவார்கள். தங்கம் அனைவருக்கும் தேவையான ஒன்று தான். அந்த தங்க நகை அடகு செல்லாமலும், மேலும் மேலும் தங்கம் பெருகிக் கொண்டே இருக்கவும் செய்யக் கூடிய எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்க அடகு செல்லாமல் இருக்க படிகாரம் என்றதும் பெரும்பாலானருக்கு இது மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பலரது வீட்டில் தங்க நகை இருப்பதை விட அடமானக் கடையில் தான் இருக்கிறது. சிலர் பொருளாதார சிக்கலினால் வைப்பார்கள். சிலர் வியாபார நிமித்தமாக வைப்பார்கள். எப்படி ஆயினும் தங்க நகை வைக்கும் போது யாரும் சந்தோஷமாக அடகு வைக்க மாட்டார்கள் அல்லவா.

- Advertisement -

அப்படி பாடுபட்டு சேர்த்து தங்கத்தை அடகிலிருந்து மீட்கவும் மேலும் மேலும் தங்க நகைகள் பெருகவும் எளிமையாக வீட்டில் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

நகை அடகு செல்லாமல் இருக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதற்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் மலர் மட்டும் தான். அது மல்லிகை பூவாக மட்டும் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அது தான் மகாலட்சுமி தயாரிக்கும் உகந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பரிகாரமும் மகாலட்சுமி தயாருக்கு தான் நாம் செய்யப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய மகாலட்சுமி தாயார் படத்தை நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தாயார் முன்பு இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சொம்பு எடுத்து அதில் சுத்தமான தண்ணீர் சிறிதளவு பன்னீர் இரண்டையும் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 5 நாணயத்தை போடுங்கள். அது ஒரு ரூபாயாக இருக்கலாம் அல்லது ஐந்து ரூபாயாக இருக்கலாம். உங்களிடம் எந்த நாணயம் இருக்கிறதோ அதில் ஐந்து நாணயம் போட வேண்டும். அதற்கு மேல் ஐந்து மல்லிகை மொட்டை போடுங்கள். இதை போட்ட பிறகு சொம்பை உங்கள் வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையால் மூடி மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக அமர்ந்து ஓம் சுதர்சனாய நமஹ என்ற இந்த மந்திரத்தை 16 முறை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் எப்போதும் நகை வைக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். அப்படி தெளிக்கும் போது சென்ற நகை எல்லாம் மீண்டும் என்னிடம் திரும்பி வர வேண்டும். தங்கம் மேலும் பெருக வேண்டும் என்று சொல்லியபடி 16 முறை தெளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் செய்து கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் சமையலறை குறிப்பு

இதன் மூலம் வீட்டில் வருமானமும் பல மடங்கு அதிகரிக்க கூடிய யோகம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் போது நீங்கள் நகையை வாங்கவும் செய்வீர்கள். கடையில் இருக்கும் நகையை மீட்கவும் செய்வீர்கள். ஒரு பரிகாரம் வீட்டில் வருமானத்தை பெருக்குவதோடு அடகு நகையை கொண்டு வருவதோடு நகையும் பெருக்கி தரும். இந்த எளிமையான பரிகாரத்தை நீங்கள் செய்து அதிக அளவு தங்க நகை சேர்த்து மகிழ்ச்சியாக வாழ வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -