வீட்டில் செல்வ செழிப்பிற்கு பஞ்சமே வரக்கூடாது என்று நினைப்பவர்கள், தினமும் இப்படி தீபம் ஏற்றி பாருங்கள், வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும் அற்புத தீபம்.

- Advertisement -

நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்கத்தில் முக்கியமானது இந்த தீபம் ஏற்றுவது. தினமும் தீபம் ஏற்றும் வீடு எந்த காலத்திலும் அழிந்ததாக சரித்திரமே கிடையாது என்பது நம் முன்னோர்களின் வாக்கு அது உண்மையும் கூட, நீங்கள் தினமும் ஏற்றக்கூடிய ஒரு தீபத்தையே கொஞ்சம் இப்படி ஏற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிறைந்து உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

எந்த வீட்டில் சூரிய உதயத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்களோ அந்த குடும்பம் எப்பேர்ப்பட்ட துயரில் இருந்தாலும், அந்த துன்பத்தை எல்லாம் தூக்கி தூர போட்டு முன்னுக்கு வந்து விடுவார்கள். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு அத்தனை சக்திகள் உண்டு. இதை பலரும் தங்கள் வாழ்வில் செய்து பலன் அடைந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் அனைத்து தேவாதி தேவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைத்து, நம் குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பார்கள் என்பது துளியும் சந்தேகமில்லை.

- Advertisement -

இது வரையில் அப்படி தீபம் ஏற்றி பழக்கம் இல்லாதவர்கள் இனியாவது பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்ற பழகிக் கொள்ளுங்கள். இது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. சரி இப்படி ஏற்றும் இந்த தீபத்தையே இன்னும் நம் குடும்பத்தின் செல்வ வளத்தை பெருக்க எப்படி ஏற்றுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்தத்தில் உங்கள் பூஜை அறையில் ஏற்றும் தீபத்தை முடிந்த அளவில் சுத்தமான பசு நெய்யில் ஏற்றினால் மிக மிக நல்லது. உங்கள் பூஜை அறையில் ஒரு அகல் எடுத்து அதை நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அதில் பசு நெய் ஊற்றி (பசுநெய் கிடைக்காதவர்கள் சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம்) பஞ்சு திரி போட்டு ஒரு சிறிய தட்டில் மல்லிப் பூக்களை பரப்பி அதன் மேல் இந்த அகல் விளக்கை வைத்து தினமும் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டிற்கு அத்தனை லட்சுமி கடாட்சங்களும் கிடைக்கும்.

- Advertisement -

இந்த ஒரு தீபத்திற்கு லட்சுமி தாயார் உங்கள் வீட்டில் வந்து நிரந்தரமாக தங்கி வேண்டும் வரங்களை தந்தே தீருவார். இந்த தீபம், மல்லிகைப் பூ இவை அனைத்திலிருந்து தாயார் நிரந்தரமாக வாசம் செய்து கொண்டிருப்பவர். இந்த தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றி வரும் போது நிச்சயமாக உங்களின் அனைத்து துயரங்களும், வறுமையும் நீங்கி செல்வ நிலை உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு நாள் போட்ட பூ, நெய், திரி அனைத்தையும் அடுத்த நாள் பயன்படுத்த கூடாது. தினமும் இவைகளை நீங்கள் மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். நாமும் நம் வீடும் நல்ல முறையில் வாழ இந்த ஒரு தீபத்தை மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தினமும் ஏற்றி வாருங்கள், நிச்சயம் உங்கள் வாழ்க்கை இந்த தீபத்தின் ஒளி போல பிரகாசிக்கும். நம்பிக்கையுடன் இந்த தீபத்தை ஏற்றி மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்று நல்ல முறையில் வாழுங்கள்.

- Advertisement -