இந்த தெய்வீக வாஸ்து குறிப்புகள் மட்டும் சரியாக இருந்தால், உங்கள் வீட்டின் செல்வ வளம் பெருகிக் கொண்டே இருக்கும்

vasthu
- Advertisement -

உணவு, உடை, உறைவிடம் இவை மட்டும் தான் மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதனுடன் பணமும் ஒன்றாக சேர்ந்து விட்டது. ஆம்! பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் வாழ்வது என்பது கடினம் தான். பலரது வீட்டிலும் வரக்கூடிய சண்டைகளுக்கும், ஒவ்வொருவரின் மன அழுத்தத்திற்கும் காரணமாக அமைவதும் இந்த பண பிரச்சனை தான். இப்பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, வீட்டில் செல்வம் பெருக குறிப்பிட்ட வாஸ்து குறிப்புகள் மூலம் சரி செய்ய முடியும். பணம் சம்பாதிப்பதை விட அதனை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். வருகின்ற பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், பல மடங்கு பெருகவும் இந்த தெய்வீக வாஸ்து குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை பெட்டியையும் எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும். அதாவது பண பெட்டியை திறக்கும் பொழுது அது வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த திசை தான் குபேரர் ராஜ்யம் செய்யும் திசையாகும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பண பெட்டியை திறக்கும் பொழுது குபேரர் அந்த பெட்டியில் பணம் நிரம்புவதற்கான வழியை செய்து கொடுப்பாராம்.

- Advertisement -

அப்போது வீட்டின் வடகிழக்கு பகுதியில் தேவை இல்லாத பொருட்கள், பெரிய கனமான பாத்திரங்கள் அல்லது இயந்திரங்களை வைப்பது என்பதையும் செய்யக் கூடாது. அதேபோல் இந்த பகுதியில் வீட்டின் மாடிப் படிக்கட்டுகளையும் வைக்கக் கூடாது. அதேபோல் வீட்டில் நீர் குழாய்களில் எப்பொழுதும் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் அதிலிருந்து வெளியேறும் நீரை போலவே வீட்டின் செல்வ நிலையும் வெளியேறிவிடும். அதுபோல் பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடி வைத்திருந்தால், ஒவ்வொரு முறை பெட்டியைத் திறக்கும் பொழுதும் அதில் இருக்கும் பணம் கண்ணாடியில் பிரதிபலித்து, பணம் பல மடங்காக தெரியும். எனவே பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

வீட்டில் இருந்து பணம் அதிகமாக வெளியேறுவதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் தென்மேற்கு திசையில் கனமான பொருளை வைக்க வேண்டும். வீட்டின் வடக்கு திசையில் பச்சை வண்ணம் பூசுவதன் மூலம் பணம் பெருகுவதை உணரமுடியும். வீட்டிலுள்ள சோபா, நாற்காலி இவற்றை வடக்கு திசை நோக்கி அமருமாறு போட வேண்டும்.

மீன் தொட்டியை வீட்டின் வடகிழக்கு பகுதியில் வைப்பதன் மூலம் பணம் பெருகும். வீட்டின் மையப்பகுதி எப்போதும் ஃப்ரீயாக இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் பெரிய கோயில் இருந்து, அதன் நிழல் உங்கள் வீட்டின் மீது படுமாறு இருந்தால் அந்த வீட்டில் குடியிருக்க, வீட்டின் செல்வம் குறைந்து கொண்டே செல்லும். அதே போல் எப்பொழுதும் கதவு, ஜன்னல் போன்ற இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் நிலைவாசல் எப்பொழுதும் சுத்தமாக மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -