இன்று வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த பஞ்சமி திதியில் மகாலட்சுமி தாயாருக்கு இந்த தீபத்தை ஏற்றினால் எப்பேர்பட்ட ஏழ்மையில் வாழ்பவர்களும் செல்வ செழிப்பான வாழ்வை வாழ்வது உறுதி.

mahalakshmi-dheepam
- Advertisement -

நம்மை பொறுத்த வரையில் வெள்ளிக்கிழமை என்றாலே அது பூஜை குரிய நாள் தான். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு செய்யும் எந்த விதமான பூஜையாக இருந்தாலும் அது நம் குடும்பத்திற்கு பல மடங்கு செல்வ செழிப்பை தரும். இன்று வெள்ளிக்கிழமையுடன் இந்த பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருப்பது மேலும் விசேஷத்தை தரக் கூடியது. இந்த நாளில் நாம் தொடங்கும் இந்த தீப வழிபாட்டு முறை நம் குடும்பத்தின் செல்வ நிலையை பல மடங்கு உயர்த்தும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த தீபத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்திற்கு நமக்குத் தேவையானது நெல்லிக்காய், பூந்திரி, சுத்தமான பசு நெய். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஏற்றலாம். ஆகையால் தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாகவே இந்த பொருட்களை எல்லாம் புதிதாக வாங்கி வந்து ஏற்றி வழிபடுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் நீங்கள் எப்பொழுதும் செய்யும் பூஜை வேலைகளை எல்லாம் முறையாக செய்து முடித்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு நெல்லிக்காயை எடுத்து அதன் மேல் லேசாக துளைகள் போல போட்டு கொள்ளுங்கள். இந்த பூந்திரியை சுத்தமான பசு நெய்யில் சிறிது நேரம் போட்டு வைக்கும் போது திரியானது நெய்யை உறிஞ்சி கொள்ளும். இப்போது இந்த திரியை அப்படியே விளக்கின் மேல் வைத்து விடுங்கள்.

பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய தட்டு வைத்து அந்தத் தட்டில் மஞ்சள் பூசி கோலம் இட்டு அதற்குமே இந்த நெல்லிக்காயை வைத்து இதற்குப் பூ வைத்து அலங்காரம் செய்த பின்பு ஏதேனும் ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொண்டு இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபத்தை பூஜையறையில் தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதாக இருந்தால் அங்கேயும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

அதே போல் இந்த தீபத்தை ஏற்றும் போது கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது மிக மிக முக்கியம். இந்த கனகதாரா ஸ்தோத்திரம் நம் வீட்டில் தொடர்ந்து கேட்டாலே வீட்டில் இருக்கும் வறுமை நிலை மாறி விடும். அதிலும் ஐஸ்வர்யத்தை அளிக்கும் இந்த தீபத்துடன் படிக்கும் போது இதனுடைய பலனை சொல்லவே தேவையில்லை. இதனால் உங்களுடைய வாழ்க்கை நிலை நிச்சயமாக மாறும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.

இந்த தீபத்தை மகாலட்சுமி தாயார் இருக்கும் ஆலயங்களிலும் ஏற்றலாம். இது மிக மிக விசேஷத்தை தரக்கூடியது. ஆலயத்தில் ஏற்றும் போது இதே வழிமுறையுடன் ஒன்பது நெல்லிக்காய் தீபம் ஏற்ற வேண்டும். அதே போல் 9 வாரங்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஆலயத்தில் ஏற்றும் போதும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். இதை படிக்க தெரியாதவர்கள் ஓம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற நாம அர்ச்சனையை சொல்லி சிறிது நேரம் அந்த தீபத்தின் முன் அமர்ந்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு! இதை செய்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

இந்த ஒரு தீப வழிபாடு போதும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஏழ்மையை விரட்டி அடித்து உங்களை செல்வ நிலைக்கு உயர்த்தி விடும். மகாலட்சுமி தாயாரை நினைத்து நம்பிக்கையுடன் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏற்றி வாருங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -