வீட்டில் எப்போதும் பணம் மழை பொழிந்து கொண்டே இருக்க சமையலறையில் எந்தெந்த பொருளுடன் எதை சேர்த்து வைக்க வேண்டும் என்ற இந்த சூட்சமத்தை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும்.

- Advertisement -

வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க எப்படி நாம் பூஜையறையை சுத்த பத்தமாக வைத்திருந்து பூஜை புனஷ்காரங்களை செய்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை நாம் சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். பூஜை அறை மகாலட்சுமி தாயார் இருக்கும் இடமெனில் சமையலறை அன்னபூரணி தாயார் குடியிருக்கும் இடம். அது மட்டும் இன்றி சமையலறை என்பது சுக்கிர பகவானுக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. அங்கு நாம் செய்யும் ஒரு சில விஷயங்கள் வீட்டில் பண வரவை அதிகரித்து தரும். அதை பற்றிய ஒரு தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க சமையலறையில் செய்ய வேண்டியது
சமையலறையில் நாம் செய்ய வேண்டிய குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக வீட்டில் வாஸ்துபடி சமையலறை தென்கிழக்கில் இருக்க வேண்டியது இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஒரு விஷயம் தவறும் பட்சத்தில் மற்ற எந்த விஷயங்களை கடைப்பிடித்தாலும் எந்த பலனும் கிடையாது. ஆகையால் சமையலறை இருக்க வேண்டிய திசை நிச்சயமாக தென்கிழக்காக இருக்க வேண்டும். நாம் நின்று சமைப்பது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து சமையலறையில் எப்பொழுதும் ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது அகல் வளக்கிலோ கொஞ்சமாக வெந்தயம், டைமண்ட் கற்கண்டு இரண்டையும் சேர்த்து வைத்து விடுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விட்டால் போதும். சமையலறை எப்படி சுக்கிர பகவான் கூறியதாக சொல்லப்படுகிறதோ அதே போல் கற்கண்டு, வெந்தியம் இவை எல்லாமே சுக்கிர அனுகிரகம் பெற்ற பொருள்கள் இவையெல்லாம் ஒன்றாக இருக்கும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும்.

அடுத்து துவரம் பருப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் எப்பொழுதும் ஒரு துண்டு சுக்கை சேர்த்துப் போட்டு வையுங்கள். இந்த இரண்டு பொருள் ஒன்றாக இணையும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும். அது மட்டுமின்றி வறுமை அந்த இடத்தில் வரவே வராது. இதே போல் அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் குங்கும பூவையும் துளசியும் ஒரு சிறிய மூட்டையாக கட்டி போட்டு வையுங்கள். இதனால் அரிசியில் எந்த வித வாடையும் வராது பயப்படாமல் போட்டு வையுங்கள் இதுவும் வீட்டில் பண வரவை அதிகரித்து தரக்கூடிய ஒரு தாந்திரீக வழி.

- Advertisement -

சர்க்கரை டப்பாவில் எப்போதும் ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் இரண்டையும் போட்டு வையுங்கள். இது பணத்தையும் வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும் அதிகரித்து தரக் கூடிய முக்கியமான தாந்திரீக வழி. அதே போல் ஒரு சில வீடுகளில் சமையலறையும், பூஜைகளையும் ஒன்றாக இருக்கும். இது போன்ற அமைப்பு இருந்தால் அந்த வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்து சமையல் அறையில் நாம் அதிகமாக இரும்பினாலான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அது மட்டும் இன்றி சமையல் அறை மேடை கருப்பு நிறத்தால் ஆனா கல் பதித்ததாக இருக்க வேண்டும். இந்த கருப்பு நிறம் இரும்பு இவை எல்லாம் சனீஸ்வர பகவானுக்குரியது. இந்த சுக்கிர சனீஸ்வர சேர்க்கையும் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: நிலை வாசலில் பிறர் பார்வை படும்படி இதை கட்டி தொங்க விட்டால் போதும். மகாலட்சுமி தாயாரின் அனுகிரக பார்வை உங்கள் மீது பட்டு, போதும் போதும் என்கிற அளவிற்கு செல்வம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

சமையலறையில் இந்த விஷயங்களை எல்லாம் சரியாக பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் பொருளாதார நிலை உயர்ந்து செல்வ வளம் அதிகரிக்கும். இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -