நிலை வாசலில் பிறர் பார்வை படும்படி இதை கட்டி தொங்க விட்டால் போதும். மகாலட்சுமி தாயாரின் அனுகிரக பார்வை உங்கள் மீது பட்டு, போதும் போதும் என்கிற அளவிற்கு செல்வம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

nilaivasal
- Advertisement -

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் எனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் வேண்டும். தாயாரின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் தாயார் முதலில் நாம் இல்லம் தேடி வர வேண்டும். வீட்டில் நாம் என்ன தான் பூஜை செய்து வழிபட்டாலும் தாயார் நுழையும் வாயிலான நிலை வாசல் ஆனது சரியாக இல்லாத பட்சத்தில் அவரின் அனுகிரகத்தை நம்மால் பெற முடியாது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தாயாரின் அனுகிரகத்தை பெறுவதோடு தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க நிலை வாசலில் செய்ய வேண்டியது என்ன
ஒவ்வொரு வீட்டில் நிலை வாசலை ராஜவாசல் என்று சொல்வார்கள். ஏனெனில் வீட்டில் தெய்வ சக்தி உள்ளே வர வேண்டும் எனில் அது நிலை வாசலில் உள்ள நிலை வாசல் தேவதைகளின் அனுமதியோடு தான் வரவேண்டும். ஆகையால் அந்த நிலை வாசலை நாம் முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் நிச்சயம் நல்லவைக்கு பதிலாக தீயவை நம் வீட்டிற்குள் நுழைய நாமே காரணமாகி விடுவோம்.

- Advertisement -

அப்படியான இந்த நிலை வாசலை நாம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து எப்போதும் மங்களகரமாக வைப்பதுடன், வீட்டில் பூஜை அறையில் தீபாரதனை காட்டும் போது நிலை வாசலுக்கும் தீபாராதனை காட்டி மகாலட்சுமி தாயாரையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டும் போது நம்முடைய வீட்டில் எப்போதும் செல்வநிலை உயர்வதோடு தீயவை அணுகாமல் இருக்கும். அத்தோடு இந்த ஒரு முடிச்சையும் சேர்த்து கட்டும் பொழுது செல்வ வளத்தை அதிகரித்து தீயவற்றை அண்ட விடாமல் நம்மை காக்கும்.

இந்த பரிகாரத்தை செய்ய ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மூன்று ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சை பழம், ஒரு பச்சை நிற கயிறு இவை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மஞ்சள் நிற துணியில் மூன்று ஒரு ரூபாவை ஃ வடிவத்தில் அதாவது முக்கோணம் போல வைத்து விடுங்கள். நடுவில் எலுமிச்சை பழத்தை வையுங்கள். எலுமிச்சை பழம் நல்லதாக இருக்க வேண்டும். இதை அப்படியே இந்த மஞ்சள் நிற துணியை வைத்து முடிச்சாக கட்டிய பிறகு பச்சை நிற நூலால் முடிச்சை இருக்க கட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த முடிச்சை உங்கள் வீட்டு நிலை வாசலில் வெளிப்புற மற்றவர் பார்வை அந்த முடிச்சின் மீது படும் படி இருக்க வேண்டும். இந்த முடிச்சில் உள்ள எலுமிச்சை கனியானது வீட்டில் எந்த ஒரு தீய சக்தியும் வராமல் நம்மை காப்பதுடன் தெய்வ சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும். இதில் இருக்கும் நாணயம் இந்த நிற துணி அனைத்தையும் வீட்டிற்கு செல்வ வளத்தை அதிகரித்து பண ஈர்ப்பையும் உண்டாக்கும். இந்த முடிச்சு வாசலில் இருக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதுமாக நமக்கு பெற்றுத் தரும்.

இதையும் படிக்காலமே: ஒரு நாள் மட்டும் இப்படி முருகன் கோவிலில் தங்கினால் திருமணத்தடை விலகி, விரைவில் திருமணம் நடைபெறும்.

இந்த முடிச்சு 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் அப்போது இதில் இருக்கும் எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு மற்ற அனைத்தையும் ஒருமுறை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகு மறுபடியும் இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை மட்டும் புதிதாக வாங்கி வைத்து கட்டி விடுங்கள். வீட்டில் இருக்கும் தீயவை அனைத்தும் நீங்கி பணவரவை அதிகரிக்கச் செய்யும் இந்த தாந்திரீக பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் இதை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -