செல்வத்தை அள்ளித் தரும் குபேர பூஜை

kuberar dheepam kalasam
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பொன்னும் பொருளையும் தாராளமாக பெற்று நல்லதொரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் எனில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் நிச்சயமாக தேவை. அத்தகைய அனுகிரகத்தை பொன்னையும் பொருளையும் காத்து தருபவரான குபேரரே. இந்த குபேரரும் மகாலட்சுமி தாயாரும் மன மகிழ்ந்து நம் வீடு தேடி வந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க கூடிய அற்புதமான வழிப்பாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் பொன்னும் பொருளும் சேர

பணத்திற்கும் செல்வ வளத்திற்கும் அதிபதியான தெய்வங்கள் எனில் அது மகாலட்சுமி தாயார் தான். ஆனால் அந்த பணத்தையும் செல்வத்தையும் பாதுகாக்க கூடிய பொறுப்பை கொண்டிருப்பவர் குபேரர். குபேரர் நினைத்தால் ஒருவரை அவரைப் போலவே வாழ வைக்க முடியும். அத்தகைய குபேரரை நாம் மனம் மகிழ வைத்து விட்டால் போதும் அவருடன் சேர்த்து மகாலட்சுமி தாயாரையும் நமக்கு பொன்னும் பொருளையும் வாரி வழங்க செய்து விடுவார்.

- Advertisement -

குபேரருக்கான பூஜை என்பதால் இதை வியாழக்கிழமை அன்று துவங்குவது மிகவும் சிறந்தது. அதே போல் இந்த பூஜையை சமையலறையின் தென்மேற்கு இடம் அல்லது பூஜையறையின் தென்மேற்கு இடமாக இருக்க வேண்டும் அது உங்களின் விருப்பம். இந்த பூஜையை தொடங்குவதற்கு முன்பாக தாமரை தண்டு திரியை வாங்கி கொள்ளுங்கள்.

இதை பன்னீரில் நனைத்து அதை ஒரு தட்டில் பித்தளை, காப்பர், வெள்ளி போன்ற தட்டுகளில் வைத்து நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தென்மேற்கு திசையில் வைத்து காய வைக்க வேண்டும். இந்த தட்டை வெயிலில் வைத்து காய வைக்க கூடாது. அதே போல் இந்த தண்டு தரையிலும் படக் கூடாது இது மிகவும் கவனமாக செய்ய வேண்டியது.

- Advertisement -

இப்போது இந்த பூஜைக்கு ஒரு கலசத்தை தயார் செய்ய வேண்டும். ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சில்வர் தவிர மற்ற எந்த சொம்பு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய் அனைத்தும் சேர்த்து கலசம் போல தயாரித்து தென்மேற்கு திசையில் வைத்து விடுங்கள்.

அதே போல் இந்த பூஜை நீங்கள் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு பட்டுத்துணியை விரித்து அதில் அமர்ந்து செய்யுங்கள். அதன் பிறகு ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி நீங்கள் காய வைத்திருக்கும் தாமரை தண்டு திரியை போட்டு தீபம் இந்த கலசத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் எரியும் போது ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீம் என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு கலசத்திற்கு தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையை தொடர்ந்து 90 நாட்கள் செய்து வரும் உங்கள் வீட்டில் என்றென்றைக்கும் அழியாத அளவிற்கு செல்வங்கள் சேரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகமாக சேர பரிகாரம்

இந்த பூஜை மகாலட்சுமி தாயார் குபேரர் போன்ற மனம் மகிழ்ந்து உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வைக்க கூடிய அற்புதமான பூஜை முறை. இந்த பூஜை முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -