தங்கம் அதிகமாக சேர பரிகாரம்

mahalakshmi jewel
- Advertisement -

தங்க நகை அதிகம் சேரக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் ஒருவர் கூட உலகில் இல்லை. தனக்கு இல்லா விட்டாலும் தன் குடும்பத்திற்காக தங்கம் சேர்க்கும் ஆண்களாக இருக்கட்டும், தன் குழந்தைகளுக்காக நகைகளை சேர்க்கும் தாய்மார்களாக இருக்கட்டும் அல்லது தங்களுக்காகவே நகை சேர்ப்பவர்களாக கூட இருக்கலாம். ஆனால் தங்கம் வேண்டாம் என்று சொல்பவர் ஒருவராக கூட இருக்க முடியாது.

அப்படியான தங்கத்தை ஒரு சிலரால் சேர்க்கவே முடியாது. ஏன் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாது. எப்படியாவது கஷ்டப்பட்டு வாங்கினாலும் அந்த தங்கம் வீட்டில் நிலைக்காமல் சென்று விடும். இந்த நிலை தங்கத்தை அனைவரும் வாங்கி சேர்க்கக் கூடிய அருமையான ஒரு பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தங்க நகை அதிகமாக சேர

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது மிகவும் சிறந்தது. அப்படி செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் செய்வது சிறந்தது.
இந்த பரிகாரத்துக்கு தேவையானது ஒரு முழு வெற்றிலை. இந்த வெற்றிலை நல்ல தரமானதாக இருக்க வேண்டும்.

அடுத்தது ஏதேனும் ஒரு சிறிய வெள்ளிப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருளாகவும் இருக்கலாம். இது மட்டும் இல்லாமல் ஆறு கற்கண்டு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம் மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிக்க மல்லிகைப்பூ. வாசம் நிறைந்த ஊதுபத்தி போன்றவற்றையெல்லாம் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு மகாலட்சுமி தாயார் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசம் மிக்க மலர்களால் அன்னை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நல்ல மனமிக்க ஊதுபத்திகளை ஏற்றி விட்டு சாம்பிராணி போட்டு வீட்டை தெய்வீக மனம் நிறைந்ததாக மாற்றி விடுங்கள். அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெள்ளி பொருளை உப்பு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை சுத்தம் செய்த பிறகு அந்த வெள்ளி பொருளின் மீது மஞ்சள் வைத்து அதன் மீது குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் ஆறு கற்கண்டு சேர்த்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த வெற்றிலையின் மீது வெள்ளியை வைத்து கையில் சிறிது பூக்களை வைத்துக் கொண்டு ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம் என்ற இந்த மந்திரத்தை சொல்லி பூக்களால் வெள்ளிக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அன்று நாள் முழுவதும் இந்த வெற்றிலையில் வெள்ளி பொருள் இருக்கட்டும். இரவு இறை பூஜை அறையில் இருந்து எடுத்து உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

சனிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் இருந்து இந்த எடுத்து வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விட்டு வெள்ளியை அப்படியே கழுவி சுத்தம் செய்யாமல் பயன்படுத்துங்கள். ஏழு வாரங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது தங்கம் வாங்கும் யோகம் உங்களுக்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மகாலட்சுமி தாயாருக்கு தங்கம் உகந்ததாக சொன்னாலும், வெள்ளியானது தாயாரின் பிறந்த வீடாகவும் தங்கம் புகுந்து வீடாகவும் கருதப்படுகிறது. எந்த பெண்ணுக்கும் தாய் வீடு என்றால் ஒரு தனி பிரியம் தானே. வெள்ளிக்கிழமையில் தாய் வீட்டு பொருளான வெள்ளியை தாயாருக்கு வைத்து வணங்கும் போது நிச்சயம் அவரின் அருளால் தங்கம் சேர்க்கும் யோகம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகர் கோயில் பரிகாரம்

ஏழு வாரங்கள் இந்த பரிகாரத்தோடு தங்கம் வாங்குவதற்கான முயற்சியும் செய்து விடுங்கள். தங்கம் வாங்கக் கூடிய யோகம் உங்களை நிச்சயம் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கையுடன் செய்து பலனடையுங்கள்.

- Advertisement -