வீட்டிற்கு செல்வத்தை வர வைக்கும் புவனேஸ்வரி வழிபாடு

bhuvaneshwar amman pray man
- Advertisement -

புவனேஸ்வரி அன்னை, இந்த பேரிலே புவனம் என்ற வார்த்தை அடங்கி விட்டது. புவனம் என்றால் உலகம் என்றொரு பொருள் உண்டு. உலகையே கட்டிஆளக் கூடிய தாயானவள் தான் இந்த புவனேஸ்வரி அன்னை. இந்த அன்னையை நாம வழிபடுவதன் மூலம் நாம் இல்லத்தையும் காத்து ரட்சித்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பார் என்பதில் ஐயமில்லை.

அப்பேர்ப்பட்ட அன்னையை இந்த வணங்கினால் நம்முடைய இல்லத்தில் செல்வ வளம் பெருகி நிம்மதியாக வாழ முடியும். மூவுலகையும் ஆளும் அன்னையை நம் இல்லத்தில் எளிமையாக எப்படி வழிபாடு செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் சேர புவனேஸ்வரி வழிபாடு

இந்த அன்னையை வழிபடுவதற்கு நாள் கிழமை எதையும் நாம் பார்க்க வேண்டியது கிடையாது. எந்த நாளில் நினைக்கிறோமோ அன்றே அன்னை வழிபாடு செய்யலாம். பெண் தெய்வங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை வழிபாடு செய்வது சிறந்தது.

இந்த வழிபாட்டை உங்களுடைய பூஜை அறை தென்மேற்கு திசையான கன்னி மூலையில் இருந்தால் அந்த இடத்தில் செய்யலாம் அல்லது குபேர மூலை என்று சொல்லப்படும் வடகிழக்கு மூலையில் இந்த வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் அமைப்பிற்கு ஏற்றவாறு இடத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

புவனேஸ்வரி அன்னை புகைப்படம் இருந்தால் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்ல வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதே போல் நல்ல மணம் மிக்க ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை போட்டு வீட்டை தெய்வீக மனம் மிக்கதாக கமல விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தேன் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் மற்றொரு கிண்ணத்தில் இரண்டு வெற்றிலை ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைக்க வேண்டும். இந்த வெற்றிலையின் நுனியானது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தேனை அன்னைக்கு நெய்வேத்தியமாக வைத்து விட்டு இந்த வெற்றிலையும் பச்சை கற்பூரத்தையும் அன்னையின் முன்பு வைத்து வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் வைக்கக் கூடிய வெற்றிலையும் பச்சை கற்பூரமும் மறுநாள் வரை அப்படியே இருக்க வேண்டும். தேனை நெய்வேத்தியமாக வைத்து விட்டு வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ணலாம். மறுநாள் காலையில் இந்த பச்சை கற்பூரம் நன்றாக கரைந்து இருக்கும். வெற்றிலையை மட்டும் எடுத்து உங்கள் தலையை சுற்றி செடிகளில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

இதே வழிப்பாட்டை தினமும் செய்பவர்கள் ஒரு வழக்கமாகவே செய்யலாம் தவறில்லை. அப்படி செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அன்னையை இந்த முறையில் வணங்கி வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். புவனேஸ்வரி அன்னையை இவ்வளவு எளிதாக வழிபடுவதன் மூலமும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் அன்னையை வணங்கி பலன் பெறலாம்.

- Advertisement -