பண வரவிற்கு வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

cash dheepam
- Advertisement -

மகாலட்சுமி தாயார் என்றாலே ஞாபகத்திற்கு வருவது வெள்ளிக்கிழமை. அதே போல் வெள்ளிக்கிழமை பூஜை என்றால் ஞாபகத்திற்கு வருவது மகாலட்சுமி தாயார். இந்த இரண்டுக்கும் அத்தனை ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. அதே போல் சுக்கிர வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பூஜைகளும் வெள்ளிக்கிழமையில் தான் பெரும்பாலும் செய்வார்கள். பணத்தை அருளக் கூடிய சுக்கிர பகவானுக்கு அதிதேவதையாக விளங்குபவர் தான் மகாலட்சுமி தாயார்.

இத்தனை அம்சங்கள் நிறைந்த வெள்ளிக்கிழமையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் நம்முடைய குடும்பத்தை பல மடங்கு செல்வ நிலைக்கு உயர்த்தி செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியான வெள்ளிக்கிழமையில் நம் வீடு வளம் பெற ஏற்றக் கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் மழை பொழிய ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் ஏற்ற வேண்டும் பெரும்பாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றும் போது வீடு சுபிட்சமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றப்படும் வீடு எந்த நாளும் வீணாய் போகாது என்ற கூற்றும் அனைவரும் அறிந்தது தான்.

அது போல தான் இந்த ஒரு தீப வழிபாட்டு முறையும். வெள்ளிக்கிழமை காலை அனைவரும் வீட்டிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றுவோம். அப்படி ஏற்றும் தீபத்தை மூன்றாக ஏற்ற வேண்டும். அந்த தீபம் நெய் தீபமாக இருப்பது கட்டாயம். முதலாவது தீபத்தை வீட்டின் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து ஏற்றுங்கள். அடுத்த தீபத்தை சமையலறையில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

மூன்றாவது தீபத்தை பூஜை அறையில் ஏற்றுங்கள். இந்த மூன்று நெய் தீபமும் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும். இந்த தீபச்சுடரானது கிழக்கு முகமாக பார்த்து எறிய வேண்டும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து ஏற்றி வரும் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பதுடன் பணம் சேர்ந்து கொண்டே செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கேட்டது கிடைக்க அஸ்திர வழிபாடு

நம்முடைய வெள்ளிக்கிழமை பூஜை வழிபாட்டுக்களுடன் சேர்த்து இந்த ஒரு தீப வழிபாட்டையும் செய்யும் போது நம்முடைய வீடு செழிப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -