எட்டுத்திக்கும் தேடி அலைந்தாலும் கிடைக்காத அற்புதமான பலனை பெற இந்த ஒரு இலை போதும். ஆண்டியையும் அரசனாக மாற்றி குபேர வாழ்க்கை வாழ வைக்கும் இலை தீபம்.

kuberar gold
- Advertisement -

16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெற வேண்டிய இந்தப் பலனை இந்த ஒரு தீபம் ஏற்றும் போது நம்மால் பெற முடியும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பதினாறு வகை செல்வங்களும் பெற்று குபேர வாழ்க்கை வாழ ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். சனிக்கிழமை காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த விளக்கை அரச மரத்தின் இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும். அந்த இலையை நாம் சனிக்கிழமையில் தான் பறிக்க வேண்டும் முதல் நாளே பறித்து வைக்க கூடாது. அது மட்டுமின்றி மாலை ஆறு மணிக்கு மேல் மரத்தில் இருந்து இலைகளை பறிக்க கூடாது.

- Advertisement -

சனிக்கிழமை அன்று காலை எழுந்து குளித்து முடித்த பிறகு அரச மர இலை ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சில்வர் தவிர வேறு எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த தட்டில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு இந்த இலைக்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தட்டில் வைத்து விடுங்கள்.

இப்போது தட்டில் இருக்கும் இலையின் மீது ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். விளக்கிற்க்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். அதில் இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி வீட்டில் சிவன், விஷ்ணு, பிரம்மா, மகாலட்சுமி தாயார் இவர்களில் யாரேனும் ஒருவர் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதய தீபத்தை நீங்கள் அரச மரத்தின் அடியில் வைத்து ஏற்றினால் இன்னும் விசேஷம். முடியாதவர்கள் மட்டும் வீட்டில் பூஜை அறையில் இதை செய்யலாம். இந்த தீபத்தை சனிக்கிழமை அன்று ஏற்ற தொடங்கி தொடர்ச்சியாக 16 சனிக்கிழமை ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றி வரும் நாளில் உங்கள் துன்பமெல்லாம் விலகி நீங்கள் எதிர்பாக்காத வகையில் உங்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்வீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த அரசமரமானது இருக்கும் விருச்சகங்களின் எல்லாம் தலையாய விருச்சகமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. உலகத்தில் அனைத்திற்கும் மூலகாரணம் இவர்கள் மூவரும் தான் இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் வணங்கும் பொழுது இவர்களின் ஆசி பெற்ற குபேரர், மகாலட்சுமி தாயார், சரஸ்வதி தேவி, தேவர்கள், கிரங்கள் என அனைவருமே உங்களுக்கு அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தை படாய் படுத்தும் ஜென்ம தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு எளிய வழிமுறையை கடைப்பிடித்தால் போதும். தரித்திரம் நீங்கி மகிழ்ச்சியாய் வாழ சுலபமான வழி.

சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் உங்கள் வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் மேன் மேலும் உயர்ந்து குபேரர் போன்ற பெரும் வாழ்க்கை வாழ துணை செய்யும். இந்த தீபத்தை நம்பிக்கையுடன் ஏற்றி வாழ்க்கையின் சகல சம்பத்துகளையும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

- Advertisement -