குடும்பத்தை படாய் படுத்தும் ஜென்ம தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு எளிய வழிமுறையை கடைப்பிடித்தால் போதும். தரித்திரம் நீங்கி மகிழ்ச்சியாய் வாழ சுலபமான வழி.

narachimar vilaku
- Advertisement -

தரித்திரம் என்பதே சாதாரண வார்த்தை கிடையாது. அதிலும் இந்த ஜென்ம தரித்திரம் என்பது நம்முடைய ஆயுள் முழுவதும் தொடர்வதும் இல்லாமல், நம்முடைய அடுத்த தலைமுறை வரை பாதிக்க கூடிய ஒன்று. இந்த ஜென்ம தரித்திரம் ஒரு குடும்பத்தில் தொடருமேயானால் அந்த குடும்பத்தில் எந்த வித நல்ல காரியமும் அவ்வளவு சுலபத்தில் நடக்காது, தொடங்கும் அனைத்திலும் தடங்கள், நிம்மதி இல்லாத சூழ்நிலை, பிரச்சனைகள் சூழ்ந்து வாழ்க்கையே வெறுக்கும் நிலைக்கு ஆளாகி விடுவோம்.

இந்த தரித்திரம் என்பது தானாக நம்மை வந்து சேர்வது கிடையாது. நாம் தெரியாமல் செய்திருந்தாலும் அல்லது நம்முடைய குடும்பத்தில் முன்னோர்கள் செய்த தவறின் தாக்கமும் இன்றும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். இது போல உங்கள் குடும்பத்தில் துன்ப நிலை தொடர்ந்து கொண்டிருந்தால் அதை தீர்க்க இந்த ஒரு எளிய வழிமுறையை ஆன்மீகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. அது என்னவென்று இந்த பதிவினை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஜென்ம தரித்திரம் தீர நரசிம்மர் வழிபாடு:
இந்த ஜென்ம தரித்திரம் தீர நாம் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. நரசிம்மருடைய ஜென்ம நட்சத்திரமே சுவாதி நட்சத்திரம் தான். ஆகையால் நரசிம்மரை சுவாதி நட்சத்திரம் வரும் நாளில், அந்த நட்சத்திரம் இருக்கும் வேளையில் நாம் வழங்கும் போது நம்முடைய ஜென்ம தரித்திரம் என்பது முற்றிலும் ஆக நீங்கி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வழிபாடு செய்வதற்கு நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியது கிடையாது. சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் அந்த நட்சத்திரமும் இருக்கும் நேரத்தில் நீங்கள் உங்கள் பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டிற்கு லஷ்மி நரசிம்மர் படத்தை வைத்து செய்தால் மிகவும் நல்லது இல்லாத பட்சத்தில் பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி தாயார் இவர்களின் படங்களுக்கு நீங்கள் மலர்கள் சாற்றி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்களின் பூஜையை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

விளக்கை ஏற்றி வைத்து விட்டு தீபத்தை பார்த்தவாறு நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கனகதாரா ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரத்தை நீங்கள் பூஜை தொடங்கிய முதல் நாள் ஒரு முறையும், இரண்டாவது நாள் இரண்டு முறை, மூன்றாவது நாள் மூன்று முறை என ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

இப்படியாக அடுத்த மாதம் சுவாதி நட்சத்திரம் வரும் வரை நீங்கள் சொல்ல வேண்டும். இந்த ஸ்தோத்திரத்தை சொல்லும் போது நரசிம்மருக்கு வெறும் பானகத்தை மட்டும் கலந்து நெய்வேத்தியமாக வைத்தால் கூட போதும். ஆனால் இதை செல்லும் போது மிகவும் சிரத்தையுடன் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்ற எண்ணத்துடனும் சிந்தனையை சிதற விடாமல் படிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதை படிக்க முடியாதவர்கள் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை யூட்யூபில் போட்ட பிறகு நீங்கள் பூஜை அறையில் அமைதியான முறையில் அமர்ந்து இந்த ஸ்தோத்திரங்கள் முடியும் வரை பூஜை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பூஜை முடியும் கடைசி நாள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயம் அல்லது பெருமாள், ஆஞ்சநேயர் இப்படியான ஆலயங்களுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு வந்து விடுங்கள். பெண்கள் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது மாத விலக்கான நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழிபாட்டை தொடரலாம்.

இதையும் படிக்கலாமே: தெரிந்தும், தெரியாமலும் கூட இந்த ஒரு விஷயத்தை வெளியில் சொல்லவே கூடாது தெரியுமா? இதை வெளியில் சொன்னால் ஒரு பலனும் இருக்காது!

உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஜென்ம தரித்திரத்தை கூட காணாமல் செய்து விடக் கூடிய சக்தி இந்த நரசிம்மர் வழிபாட்டிற்கு உண்டு. இந்த வழிபாட்டை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் செய்து வருபவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமான வாழ்க்கை வாழ நரசிம்மர் அருள்புரிவார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -