இந்த ஆலமர வேர் எங்கு கிடைத்தாலும் மறக்காமல் எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜையில் வைத்து இந்த முறையில் பூஜை செய்தால் நீங்கள் செல்வந்தராகும் யோகம் உங்களை தேடி வரும்

- Advertisement -

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இல்லை. நம்மால் இவ்வளவு தான் சம்பாதிக்க முடியும் இப்படி ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ முடியும் என்று அளவிற்கு தான் நம் வருமானம் இருந்தாலும், இன்னும் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும், பெரிய பணக்கார்ராக வேண்டும், ஆடம்பர வாழ்க்கைகளை அனுபவிக்க வேண்டும் என இது போன்ற எண்ணங்கள் மனிதனுக்கு வருவது இயல்பு. ஆனால் அதற்கான முயற்சிகள் அனைத்தும் எடுக்க வேண்டும். சில சமயம் முயற்சிகள் எல்லோருக்கும் கை கொடுப்பதில்லை. சில நேரங்களில் ஒரு சிலர் எத்தனை தான் பாடு பட்டாலும் அவர்களுக்கு சில விஷயங்கள் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அதை சரி செய்ய இந்த ஒரு வேரை எடுத்து வந்து பூஜை செய்து உங்கள் பணப்பெட்டியில் வைத்தால் போதும். உங்களுக்கு தடைப்பட்டு இருக்கும் பண வரவை இந்த வேர் நீக்கி, நீங்கள் செல்வந்தராகும் யோகத்தை கொடுக்கும். அந்த வேரை வைத்து எப்படி பூஜை செய்வது என்பதை தெரிந்து கொள்வதற்காக நாம் பதிவுக்குள் செல்வோம்.

ஆலமரத்தை பார்த்திருப்போம் ஒரு மரம் வளர்ந்து இருக்கும் அதை சுற்றி நிறைய விழுதுகள் இருக்கும். அந்த ஆலம் விழுது வேர் தான் இந்த பரிகாரத்திற்கு தேவை. அதாவது ஆலா மரத்தின் விழுது பூமியில் பட்டு அதிலிருந்து வரும் வேர் தான் உங்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவும் சக்தி உண்டு. அப்படி வரும் வேரானது வடக்கு நோக்கி செல்லும் வேறாக பார்த்து நீங்கள் எடுத்து வர வேண்டும். வேரை எடுக்கும்போது இரும்பு சம்பந்தமான எந்த பொருளைக் கொண்டும் எடுக்கக் கூடாது. அதற்கு ஒரு கருங்கல்லை பயன்படுத்தலாம் அல்லது செம்பு கம்பி, பித்தளை கம்பி, இப்படி ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாமே தவிர இரும்பு பொருள் அந்த வேரின் மீது படவே கூடாது இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதே போல வேரையும் இந்த கருங்கல்லை கொண்டே வெட்டி எடுக்கலாம்.

- Advertisement -

ஆல மர விழுதின் வடக்கு புறமாக போகும் வேரை எடுத்து அதை சுத்தமான பசுஞ் கோமியத்தில் அலசிய பிறகு பச்சை கற்பூரம் தீபம் ஏற்றி அந்த தீபத்தின் அனலில் இந்த வேரை காட்ட வேண்டும் . வேர் எரிந்து விடக்கூடாது அனலில் தான் இதை காட்ட வேண்டும். எனவே தீபம் எரிவதற்கு சற்று மேலே தூக்கி இந்த வேரை காட்டுங்கள். அதன் பிறகு ஒரு வெற்றிலையில் இந்த வேரை வைத்து வேர் வெளியே தெரியாத அளவுக்கு வெற்றிலையில் வைத்து மடித்து ஒரு மஞ்சள் நூலால் இதை கட்டிவிட வேண்டும். அதன் பிறகு துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அது எந்த நிற துணியாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நல்ல சுத்தமான துணியாக இருக்க வேண்டும். அதில் இந்த வெற்றிலை வேரை வைத்து அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம், ஒரு ஏலக்காய் சேர்த்து மூட்டையாக கட்டி விடுங்கள்.

விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு இதை உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து உங்கள் குலதெய்வத்தையோ அல்லது உங்களின் இஷ்ட தெய்வத்தையோ வணங்கி உங்களின் எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று இதை கட்டி வைக்கிறீர்களோ, அந்த பிரச்சனை விரைவில் சரியாகி விட வேண்டும் என கடவுளிடம் மனதார வேண்டிக்கொண்டு நீங்கள் பணம் வைக்கும் இடத்தில்இந்த முடிச்சை வைத்து விடுங்கள். அல்லது உங்கள் வீட்டில் பத்திரம் ஏதாவது இருந்தால் அங்கும் வைத்துவிடலாம்.

- Advertisement -

இதை வைக்கும் போது பணம் தொடர்பான அனைத்து தடைகளும் நீங்குவதோடு மட்டுமில்லாமல் இதை பத்திரங்கள் வைக்கும் இடத்தில் வைப்பதால் உங்களின் சொத்து பல மடங்கு பெருகவும், அதே நேரத்தில் உங்களுடைய சொத்தின் மீது வில்லங்கமோ , வழக்கோ எதுவாக இருந்தாலும் இந்த வேர் அனைத்து தடைகளும் நீங்கி உங்கள் பிரச்சனைகளை தீர்த்து விடும். (ஆனால் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வேண்டும் கோரிக்கை நியாயமானதாக இருக்க வேண்டும். அதே போல் அந்த சொத்தும் உங்களுக்கு உரிமை உள்ளதாக இருக்க வேண்டும்).

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு வாங்க எளிய வாஸ்து பரிகாரம்

இனி இந்த வேரை எங்கு பார்த்தாலும் கண்டிப்பாக எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்து உங்கள் பிரச்சனைகளை இந்த பரிகாரத்தை மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -