சொந்த வீடு வாங்க எளிய வாஸ்து பரிகாரம்

- Advertisement -

உலகெங்கும் இருக்கும் இன்றைய சூழலில் நாம் வசிக்க நமக்கென்று சொந்த வீடு என ஒன்று இருந்தால், அதற்காக நமது முன்னோர்களுக்கும், இறைவனுக்கும் நாம் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு தற்போது தாங்கள் வசிக்கின்ற வீட்டை விற்க வேண்டும் என்கிற ஒரு சூழல் ஏற்படும். அதே போன்று சிலர் தங்களுக்கென சொந்தமாக ஒரு புதிய வீட்டை வாங்கும் முயற்சிகளிலும் இருப்பார்கள். அப்படி புதிய வீடு வாங்க விரும்புபவர்களும், தாங்கள் வசிக்கின்ற வீட்டை விற்க முயற்சிபவர்களும், தங்களின் விருப்பம் நல்ல முறையில் நிறைவேற செய்ய வேண்டிய ஒரு எளிய வாஸ்து பரிகாரம் குறித்து இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒவ்வொரு வீடு அமைந்திருக்கின்ற வீட்டு மனையிலும் வாஸ்து சாஸ்திரத்தின் தெய்வமான “வாஸ்து பகவான்” வசிக்கிறார் என்பதே ஐதீகம். இந்த வாஸ்து பகவானுக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற ஒரு தேவதை தான் வாஸ்து தேவதை என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

- Advertisement -

வாஸ்து தேவதையை நாம் திருப்தி படுத்துவதன் மூலம் நாம் வசிக்கின்ற வீட்டில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் வாஸ்து தேவதைக்கு உரிய எளிய பரிகாரம் இதோ.

வாஸ்து பரிகாரம்

ஏதாவது ஒரு சுபமுகூர்த்த தினத்தன்று, இரவு வேளையில் நீங்கள் உணவருந்தும் பொழுது, உங்கள் தட்டில் இருக்கின்ற உணவை நீங்கள் முதலில் சாப்பிடுவதற்கு முன்பாக, அந்த உணவு தட்டில் என்னென்ன வகை உணவுகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்து, ஒரு வெள்ளை நிற காகிதத்தில் வைத்து விட்டு, நீங்கள் உங்கள் தட்டில் இருக்கின்ற உணவை சாப்பிட வேண்டும்.

- Advertisement -

இரவு உணவை சாப்பிட்டு முடித்ததும் சாப்பிட்ட கைகளை கழுவாமல், வாயில் தண்ணீர் ஊற்றி கொப்பளிக்காமல், நீங்கள் தனியாக எடுத்து வைத்த சிறிதளவு உணவு வகைகள் அடங்கிய வெள்ளை காகிதத்தை எடுத்து வந்து, உங்கள் வீட்டின் சுற்றுச்சுவர் எல்லைக்கு வெளிப்புறத்தில் வைத்து விட வேண்டும்.

வாஸ்து சாஸ்திர தாந்திரிக பரிகார முறைப்படி நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு உணவு வகை கொண்ட இந்த காகிதம், வாஸ்து தேவதைக்கு நீங்கள் கொடுக்கும் பிரசாதமாக கருதப்படுகிறது.

- Advertisement -

இப்படி வீட்டிற்கு வெளியில் நீங்கள் வாஸ்து தெய்வத்திற்குரிய இந்த பிரசாதத்தை வைக்கும் பொழுது, நீங்கள் புதிய வீடு வாங்க வேண்டும் என விரும்பினாலும் அல்லது நீங்கள் வசிக்கின்ற வீட்டை விற்க விரும்பினாலும் வாஸ்து தேவதையிடம் “நான் எனது வீட்டை நல்ல விலைக்கு விற்க விரும்புகிறேன் அல்லது நான் புது வீடு வாங்க விரும்புகிறேன், அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்” என வேண்டிக்கொண்டு பின்பு தான் உணவு சாப்பிட்ட உங்கள் கைகளை கழுவிக் கொண்டு வீட்டிற்குள்ளாக செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் உண்டாகும் பல சிக்கல்களும், கடன் தொல்லைகளும் சரியாக, உங்கள் வீட்டில் வாஸ்து கோளாறை சரி செய்யும் வழி

தாங்கள் வசிக்கின்ற வீட்டை விற்க வேண்டும் என நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். புதிய வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அதே போன்று, நீங்கள் தற்போது வசிக்கின்ற வீட்டில் எவ்வகையான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், தானியங்கள் நிறைந்து, செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் இப்பரிகாரத்தை மாதந்தோறும் 1 முறை செய்ய வேண்டும்.

- Advertisement -