முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹேர் பேக்

sembaruthi leaves hair pack
- Advertisement -

இளமையாக இருக்க வேண்டும் என்று என்று நினைப்பவர்கள் தங்கள் சருமத்திற்கு அதிக அளவு முக்கியத்துவத்தை தருவார்களே தவிர்த்து தலை முடி இளமையாக இருக்க வேண்டும் என்று யாரும் நினைப்பது கிடையாது. தலைமுடி நரைக்க ஆரம்பித்தால் தான் நரைத்து விட்டது என்று கவலைப்படுவார்களே தவிர்த்து தலை முடி நன்றாக இருக்கும் போது அதையும் இளமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் செம்பருத்தி இலையை பயன்படுத்துவதன் மூலம் எப்படி நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய சருமத்திற்கு கொலாஜின் என்ற ஒரு பொருள் தேவைப்படுகிறது. இந்த பொருள் நம்முடைய சருமத்தில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் இளமையான தோற்றத்தை பெற முடியும் என்பது பலரும் அறிந்ததே. இது தலைமுடிக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். அப்படிப்பட்ட கொலாஜின் அதிகம் இருக்கக்கூடிய பொருளாக தான் செம்பருத்தி இலை திகழ்கிறது.

- Advertisement -

மேலும் செம்பருத்தி இலையில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது நம்முடைய தலைமுடியை மிகவும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. நம்முடைய தலையில் எந்தவித பிரச்சினைகளும் வராமல் இருப்பதற்கு இந்த செம்பருத்தி இலை ஒரு ஆன்ட்டி இன்ஃபர்மேஷன் ஆக பயன்படுகிறது. இதன் மூலம் பொடுகு ரீதியான பிரச்சினைகள் எதுவும் நமக்கு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கைப்பிடி செம்பருத்தி இடையே எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நம்முடைய தலைமுடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர செய்வதற்கு உதவக்கூடிய இலையான கருவேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டிற்கு ஒன்று என்ற வீதத்தில் நம்முடைய தலைமுடிக்கு ஏற்றவாறு இந்த இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்தாமல் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நாம் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும் பொழுது நம் தலை முடி இளமையாக இருக்கும். மேலும் நம் தலைமுடியில் எந்த விதமான இன்பெக்ஷனும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். இளநரை பிரச்சினை நீங்கும். முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.

முக்கியமான குறிப்பு இந்த ஹேர் பேக்கை நாம் பயன்படுத்தும் பொழுது கண்டிப்பான முறையில் கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். என்னதான் பியூட்டி பார்லர் சென்றாலும் அங்கு கண்டிப்பான முறையில் கெமிக்கல் நிறைந்த பொருட்களை தான் உபயோகப்படுத்துவார்கள் என்பதால் நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய அதுவும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த செம்பருத்தி இலை மற்றும் கருவேப்பிலையை வைத்து நம்முடைய தலையின் ஆரோக்கியத்தையும் இளமையையும் நம்மால் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முகம் பிரகாசமாக ஃபேஸ் பேக்

எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு மதிப்பு இருக்காது என்று கூறுவார்கள். அப்படி மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை நாம் பயன்படுத்தி நம்முடைய இளமை தோற்றத்தை என்றும் தக்கவைத்துக் கொள்வோம்.

- Advertisement -