உங்களுடைய அழகை செக்கச்செவேலென பொக்கிஷம் போல பாதுகாக்க வெறும் 4 செம்பருத்திப் பூக்கள் இருந்தால் போதுமே.

face6
- Advertisement -

நம்முடைய முகம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும். சுருக்கங்கள் விழக்கூடாது. முகப்பருக்கள் வரக்கூடாது. கரும்புள்ளிகள் தங்கக் கூடாது. பார்ப்பதற்கு எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த டிப்ஸை தாராளமாக ட்ரை பண்ணி பார்க்கலாம். பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. நிறைய காசு செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. செக்கச்செவேலென உங்கள் அழகை பொக்கிஷம் போல பாதுகாக்கக்கூடிய செம்பருத்தியை முக அழகுக்காக எப்படி பயன்படுத்துவது. ரெமிடியை தெரிந்துகொள்வோமா.

முதலில் செடியிலிருந்து 4 செம்பருத்திப் பூக்களை எடுத்து கொள்ளுங்கள். அதை முதலில் நல்ல தண்ணீர் ஊற்றி கழுவி விடவேண்டும். அதன் பின்பு அதை மிக்ஸியில் போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி விழுது போல அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள். 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி முதலில் செம்பருத்தி பூவை விழுதாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொண்டு, அந்த சாறுடன்  இன்னும் 1/2 டம்ளர் தண்ணீரை கலந்து இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். (ஒரு டம்ளர் அளவு தண்ணீரை நேரடியாக மிக்ஸி ஜாரில் ஊற்றி செம்பருத்திப் பூ சாறு எடுத்துக் கொண்டாலும் அது அவரவர் விருப்பம் தான்.)

- Advertisement -

அவ்வளவு தான். நம்முடைய சருமத்தை பாதுகாக்க கூடிய ஸ்ப்ரே தயார். 4 செம்பருத்தி பூவுக்கு, 1 சின்ன டம்ளர் அளவு தண்ணீர் போதுமானதாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் ஏழு நாட்கள் வரை கெட்டுப் போகாது. தினமும் மூன்று முறை இந்த ஸ்பிரேவை உங்களுடைய முகத்தில் அடித்துக் கொள்ளலாம்.

ஸ்ப்ரே செய்து விட்டு முகத்தை கழுவ வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. நீங்கள் ஸ்ப்ரே செய்தவுடன் இந்த தண்ணீரை உங்களுடைய முகம் உறிஞ்சிக் கொள்ளும். இந்த செம்பருத்திப் பூ தண்ணீரானது உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் படிப்படியான தீவினை கொடுக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு செம்பருத்திப்பூ கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாட்டு மருந்து கடைகளில் செம்பருத்திப் பூ பொடி கிடைக்கின்றது. அதை வாங்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அப்படியே அதை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். (ஸ்ப்ரே பாட்டில் இல்லை என்றாலும் சாதாரண பாட்டிலில் இந்த செம்பருத்திபூ தண்ணீரை ஊற்றி வைத்து, ஒரு காட்டனில் இந்த தண்ணீரை தொட்டு உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.)

நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி துடைத்து விட்டு, அதன் பின்பு இந்த ஸ்ப்ரேவை முகத்தில் அடித்துக் கொண்டு அப்படியே தூங்கச் செல்லலாம். செம்பருத்தி பூவில் இந்த டிப்ஸை ட்ரை பண்ணாலும் சரி, செம்பருத்திப்பூ பொடியில் இந்த டிப்ஸை ட்ரை பண்ணாலும் சரி, இரண்டுக்கும் ஒரே ரிசல்ட் தான் கிடைக்கும். 10 நாட்கள் தொடர்ந்து இந்த டிப்ஸை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். ரிசல்ட் உங்களுக்கே தெரியும்.

- Advertisement -