வயதான தோற்றத்தை மாற்றுவதற்கு இந்த ஒரு பூ உங்களிடம் இருந்தால் போதும்.

sembaruthi water
- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கிறது. தன்னுடைய வயதுக்கேற்ற தோற்றம் இருந்தாலே போதும் என்று நினைப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கோ தங்கள் வயதை மீறிய முதிர்ச்சித் தன்மையை முகத்தில் காட்டிவிடும். அப்படிப்பட்டவர்கள் உபயோகப்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான பேஸ் வாட்டரை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

எங்காவது விசேஷத்திற்கு நாம் செல்லும் பொழுது உங்களுக்கு வயது என்ன 20, 25 இருக்குமா? என்று நம் வயதை குறைத்து யாராவது கேட்டார்கள் என்றால் நமக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதே சமயம் 20 வயதில் இருக்கும் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்து எப்படியும் உங்களுக்கு 30 வயசு இருக்கும் இல்ல என்று அதிகமாக வயதை கூறும் பொழுது அவர்களுக்கு வருத்தம் ஏற்படும்.

- Advertisement -

இது முகத்தின் தோற்றத்தை பொறுத்துதான் அமைகிறது. முகத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்வதற்கு பல அரிய பொருட்கள் இருக்கின்றன. இருப்பினும் மிகவும் எளிமையாக நம் வீட்டிலேயும் நம் வீட்டின் அருகிலேயும் கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வைத்து சிரமமே படாமல் எளிமையான முறையில் நம்முடைய இளமை தோற்றத்தை நாம் பராமரித்துக் கொள்ளலாம். சரி வாருங்கள். அது என்ன பூ என்று பார்ப்போம்.

அனைவரின் இல்லங்களிலும் வளர்க்கக்கூடிய செம்பருத்திப் பூ தான். இந்த செம்பருத்தி பூவை நாம் அப்படியே பறித்து அதன் மகரந்தத்தை மட்டும் எடுத்துவிட்டு இதழ்களை நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இயலாதவர்கள் நாட்டு மருந்து கடையில் செம்பருத்தி பூ பொடி என்ற விற்கப்படுகிறது. அதை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்பொழுது ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு செம்பருத்தி பூ பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் கால் ஸ்பூன் அளவிற்கு சந்தன பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு கலக்கும் பொழுது அந்த தண்ணீரின் நிறம் என்பது மாறிவிடும்.

இப்பொழுது ஒரு வடிகட்டியை பயன்படுத்தி அந்த துகள்கள் ஏதும் இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இந்த தண்ணீரை நாம் தினமும் மூன்று முறை முகத்தில் தடவினாலே போதும். வேறு எதுவுமே செய்ய வேண்டாம். இப்படி நாம் தொடர்ந்து செய்து கொண்டே வந்தோம் என்றால் முகத்தில் இருக்கக்கூடிய முதிர்ச்சி தன்மைகள் அனைத்தும் நீங்கி முகம் இளமையுடன் இருக்கும். அது மட்டுமா? முகப்பருக்கள் ஏதும் வராமல் தடுக்கப்படுகிறது. முகப்பருக்களால் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகளும் பள்ளங்களும் சரி செய்யப்பட்டு முகம் வழு வழுப்பாக பொலிவுடன் இளமையுடன் தோற்றமளிக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் உடனடியாக முகம் பொலிவு பெறும்.

இந்த எளிமையான அழகு குறிப்பை நீங்களும் பயன்படுத்தி என்றும் இளமையுடன் வாழுங்கள்.

- Advertisement -