ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் உடனடியாக முகம் பொலிவு பெறும்.

coffee powder face pack
- Advertisement -

பெண்கள், ஆண்கள் என்று பலருக்கும் தாங்கள் இளமையாக இருக்க வேண்டும். முகப்பொலிவுடன் இருக்க வேண்டும். பிரகாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் இருக்கும். அப்படி இருந்தாலும் அதற்காக செலவு செய்யக்கூடிய நேரம் அதிகமாக இருப்பதால் அதை செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்களாக இருந்தாலும் அதை அடிக்கடி செய்ய வேண்டும் என்னும் சூழ்நிலை ஏற்படும் போது அதை செய்யாமல் விட்டுவிடுவார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வாரத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் முகம் பிரகாசத்துடனும் இளமையுடனும் இருக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். அது அந்த காலத்து பழமொழி. இந்த காலத்தில் மேக்கப் ஒன்றை அனைவரும் முகத்தில் போட்டுக் கொண்டு முகத்தை அழகாக காட்டிக் கொள்கிறார்கள். அது தற்காலிக அழகு தான் என்பது பலருக்கும் புரிந்த ஒன்றாக தான் இருக்கிறது. அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதை பலரும் உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

நம் சருமத்திற்கு தேவையான சத்து மிகுந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணும் பொழுதும் அதே சமயம் மனதை என்றும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுதும் நம்முடைய முகத்தில் அழகு என்பது குறையாமல் நிலைத்திருக்கும். அது மட்டுமல்லாமல் வயதான தோற்றமும் ஏற்படாது. இதோடு சேர்த்து முகத்திற்கு நாம் சிறிது நேரம் செலவு செய்தாலே முகம் என்றும் பிரகாசமாக இருக்கும்.

ஒரு மிக்சிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காபித்தூளை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் பேஸ்ட்டாக மாற்றுவதற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்க்க வேண்டும். இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்தால் கிரீம் பதத்திற்கு ஒரு பேஸ்ட் தயாராகிவிடும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை நாம் இரவு படுக்க செல்வதற்கு முன் உபயோகித்தால் அதன் பலன் இரட்டிப்பாக இருக்கும். காபித்தூளை முகத்திற்கு நாம் பயன்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்குகிறது. முகப்பருக்களால் ஏற்பட்டிருந்த வடுக்களும், பள்ளங்களும் சரியாகின்றன. அதுமட்டுமில்லாமல் முகத்திற்கு ஒருவித பொலிவை தருகிறது.

அரிசி மாவு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் முகத்திற்கு ஒருவித வெண்மையை தருகிறது. தயிர் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இளமையை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: ஊரே உங்களை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முகம் பிரகாசமாக மாறும். இதை மட்டும் முகத்தில் தடவினால்.

இந்த ஃபேஸ் பேக்கை எந்த வயதில் இருப்பவர்களும் உபயோகப்படுத்தலாம். ஆண், பெண் என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பேஸ் பேக்காக தான் இது திகழ்கிறது.

- Advertisement -