நீங்கள் செய்த பூஜை நல்ல பலன் கொடுக்க, இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி பாருங்கள்

poojai
- Advertisement -

ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து பலவித பூஜைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவை நல்ல பலனை கொடுக்கின்றன. ஒரு சிலருக்கோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஒவ்வொருவரும் தங்களை அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளும் கூட காரணமாக இருக்கலாம். எனவே ஒரு சில பூஜை குறிப்புகளை சரியாக பின்பற்றி வரும்பொழுது நீங்கள் செய்யும் பூஜைக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. வாருங்கள் அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும். தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத்துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

- Advertisement -

கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும். பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில்நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்)
உடலிற்க்கு நன்மை விளையும். ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும். நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

- Advertisement -

வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நமக்கு பலவித கெடுதல்களை கொடுக்கிறது. எனவே சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது. காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும். மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும். கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும். கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை. வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது. அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள். வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார். கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

- Advertisement -