இந்த ஷாம்புவை போட்டு தலைக்கு குளித்தால் வெள்ளை முடி நிரந்தரமாக கருப்பாக மாறும். ஒரே நாளில் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி விடலாம்.

white-hair
- Advertisement -

வெள்ளை முடி நிரந்தரமாக கருப்பாக மாறவும், முடி அடர் கருப்பு நிறத்தில் வளரவும், நரைமுடி வராமல் தடுக்கவும், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், ஒரு சுலபமான குறிப்பை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தலை முடியை கருப்பாக மாற்ற இந்தக் குறிப்பில் நாம் பயன்படுத்த போகும் பொருள் கருஞ்சீரகம். கருஞ்சீரகத்திற்கு மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதே சமயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. கடைகளில் விற்கக்கூடிய கருஞ்சீரக எண்ணெய் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் நன்மைகளை கொடுக்கும். நரை முடி வளராமல் தடுக்கும். ஆனால் கருஞ்சீரக எண்ணெய்க்கு கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும்.

சுத்தமான கருஞ்சீரக எண்ணெய் கிடைத்தால் அதை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். சரி இது தவிர கருஞ்சீரகத்தை வைத்து ஒரு ஷாம்பூ நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று இப்போது தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஷாம்புவை தயார் செய்ய நமக்கு கருஞ்சீரகம் தேவை. நாட்டு மருந்து கடைகளில் மலிவாக கருஞ்சீரகம் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் உங்களுக்கு தேவையான அளவு கருஞ்சீரகத்தை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். படபடவென பொரிந்து முழுமையாக கருஞ்சீரகம் வறுபட்டு வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். வறுப்பட்ட கருஞ்சீரகம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு முடிந்தவரை நைசாக பொடித்து விடுங்கள். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அல்லது 2 டேபிள் ஸ்பூன் உங்கள் முடிவுக்கு தேவையான அளவு கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை ஊற்றி கலக்குங்கள். எந்த பிராண்ட் ஷாம்புவை நீங்கள் பயன்படுத்தினாலும் சரி. அதை இந்த கருஞ்சீரகத்தோடு சேர்த்து கலந்து அப்படியே வைத்து விட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை தலைக்கு குளிப்பதாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஷாம்புவை கருஞ்சீரக பொடியுடன் கலந்து ஊற வைத்து விடுங்கள். 8 லிருந்து 10 மணி நேரம் ஷாம்பு கருஞ்சீரகத்தோடு ஊறட்டும். அதன் பின்பு இந்த ஷாம்புவை எடுத்து குளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு தலையில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பார்ப்பதற்கு இது கருப்பு ஹேர்டை போல தான் இருக்கும்.

உங்கள் கையாலேயே இந்த கலவையை எடுத்து தலையின் மயிர் கால்களில் படும்படி தேயுங்கள். அதன் பின்பு முடியின் மேல் பக்கம், மற்றும் முடியின் நுனி வரை இந்த கலவையை தடவி விட்டு அப்படியே ஒரு கொண்டை கட்டிக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல ஹேர் வாஷ் செய்து கொள்ளலாம். வாரத்தில் 2 நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்களுடைய முடி சூப்பராக கருகருன்னு வளர தொடங்கி விடும். முதல் தடவை இதை பயன்படுத்தும் போதே முடி உதிர்வு எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை நீங்களே கவனிக்கலாம். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான ரெமெடி இது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. அழகான முடியை பெற முடியும்.

- Advertisement -