கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

shoolin-dhurgai
- Advertisement -

இன்றைய சூழலில் கண் திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண் திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை என்பதையே பலரும் அறியாமல் அவைதிப்படுவதுண்டு. இதே போல வீட்டில் சில துர் சக்திகள் இருந்தாலும் பல இன்னல்கள் நேரிடும். எத்தனை பிரகாரங்கள் செய்தும் துன்பங்கள் குறைந்த பாடில்லை என்று புலம்புவோரும் உண்டு. கண் திருஷ்டி, துர்சக்தி என வீட்டில் இருக்கும் தீயவைகளை விரட்டி அடிக்க ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

dhurgai

சூலினி துர்கா மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா

- Advertisement -

துர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.

துர்க்கை வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

துர்க்கை சக்தி வடிவான தெய்வம் ஆவார். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வங்களை வழிபடுவதற்குரிய தினங்களாக வாரத்தில் வருகின்ற செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன. அதோடு மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் தங்களின் குறைகள் தீர அம்மனுக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் பலன்கள் விரைவாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும். ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த மாதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மாதத்தில் வருகின்ற அனைத்து தினங்களும் சக்தி வழிபாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றன. எனவே ஆடி மாதத்தில் துர்க்கையம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழா காலம் மகிஷாசுரமர்த்தினி என்கிற வடிவம் தரித்த துர்க்கையம்மனை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான காலகட்டமாகும். இக்காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து, விரதங்கள் மேற்கொண்டு வழிபடுவர்களுக்கு நன்மையான பலன்கள் தொடர்ந்து ஏற்படும்.

durga

துர்க்கை வழிபாடு பலன்கள்

- Advertisement -

துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். அதிலும் இந்த சூலினி துர்க்கை அம்மனை மூல மந்திரம் துதித்து முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். அனைத்து வகையான திருஷ்டி தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
ஆண் குழந்தை பிறக்க மந்திரம்

English Overview:
Here we have Soolini durga moola mantra in Tamil. It is also called as Soolini durga moola manthiram in Tamil.

- Advertisement -