நாளை ஸ்ரவண சிவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் சனி பிரதோஷம். இந்த 5 ராசிகளுக்கும் அடிக்கப்போகுது ராஜ யோகம். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் கிடைக்க சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது.

sivan3
- Advertisement -

சிவபெருமானுக்கு உரிய விசேஷ தினங்களில் சிவராத்திரியும் பிரதோஷமும் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அந்த இரண்டு சிறப்பு வாய்ந்த நாட்களும் ஒரே நாளில் சேர்ந்து வருகிறது. அதுவும் ஸ்ரவண மாதத்தோடு சேர்ந்து இந்த இரண்டு விசேஷ தினங்கள் வந்திருப்பதால் இந்த மாதம் வந்திருக்கும் சனி பிரதோஷமும், சிவராத்திரியும் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது.

இந்துக்களின் பாரம்பரிய நாள்காட்டியின் படி ஐந்தாவது வரக்கூடிய மாதத்திற்கு ஸ்ரவண மாதம் என்று பெயரிட்டு உள்ளார்கள். இந்த ஸ்ரவண மாதம் சிவபெருமானுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்ரவண மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் அருள் ஆசியையும், ராஜ யோகத்தையும் பெறப் போகிறார்கள் என்பதை பற்றி ஜோதிடத்தில் ஒரு கணிப்பு சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த மாதம் யோகத்தை பெறப்போகும் 5 ஐந்து ராசிகாரர்கள் எவை. நாளைய தினம், நாளைய தினம் சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஸ்ரவண சிவராத்திரியில் ராஜ யோகம் பெற போகும் 5 ராசிகள்:
இந்த ஸ்ரவண மாதத்தில் ராஜயோகத்தை பெறப்போகும் ஐந்து ராசிகள் இவைதான். சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம், நாளைய தினம் நீங்கள் கட்டாயம் சிவன் ஆலயங்களுக்கு சென்று அங்கு இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். உங்கள் கைகளால் வில்வ இலைகளை வாங்கி மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாத்த வேண்டும். நந்தி தேவருக்கும் உங்கள் கைகளால் வில்வ இலைகளை மாலையாக கட்டி போடுவது சிறப்பான பலனை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் நாளைய தினம் சிவபெருமானுக்கு உங்கள் கைகளால் பசும்பாலை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுங்கள்.

இந்த வழிபாட்டு முறை மேல் சொன்ன இந்த ஐந்து ராசிகளுக்கு மட்டும் கிடையாது. எல்லோருமே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இந்த ஐந்து ராசிக்காரர்களும் வாழ்வில் பெரிய துன்பங்களை கடந்து வந்திருப்பார்கள். ஆகவே இவர்கள் பட்ட கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நாளை இவர்கள் கட்டாயம் சிவபெருமானின் பாதங்களை சரணடைவது தான் ஒரே வழி. பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இனி வரக்கூடிய நாட்களில் சந்தோஷமாக வாழ நாளை இந்த ஐந்து ராசிக்காரர்களும் கட்டாயம் சிவனை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து சிவபெருமானை மனதார நினைத்து ‘நமசிவாய’ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, பெண்கள் தீட்டு காலமாகவே இருந்தாலும் சரி மனதில் நமசிவாய மந்திரத்தை சொல்லுவதன் மூலம் எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எந்த வகையில் யோகம் அடிக்க போகிறது என்பதை பற்றிய தகவல்களை சுருக்கமாக தொடர்ந்து பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய முன்னேற்றம் ஏற்படும். எப்போதுமே கஷ்டமாக நகர்ந்து வந்த உங்களது வாழ்க்கை சந்தோஷமாக இனி நகர்ந்து செல்லும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இனி வரக்கூடிய காலகட்டத்தில் சாதித்துக் கொள்வீர்கள். வெற்றி உங்கள் பக்கம் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

கன்னி:
அந்த சிவபெருமானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில், எல்லாம் நல்லதாக நடக்கும். குறிப்பாக நீண்ட நாள் தடைப்பட்டு வந்த திருமணம் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு கஷ்டப்பட்டு இருந்தவர்களுக்கு நல்ல வருமானத்தில் நல்லதொரு உத்தியோகம் கிடைக்கும். புதியதாக ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். இரவில் நன்றாக தூக்கம் வரப்போகின்றது.

தனுசு:
தனுசு ராசி காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் சொத்து தகராறு ஒரு முடிவுக்கு வரும். வராத பணம் எல்லாம் வசூல் ஆகும். கடன் பிரச்சனை தீரும். பொருளாதாரத்தில் படிப்படியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாக சனிபகவானால் பெரிய அளவில் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். பாத சனி உங்களை படாத பாடு படுத்தி இருக்கும். அது மட்டுமில்லாமல், வக்கிர சனி பெயர்ச்சியின் காரணமாக தொழிலில் பெரிய இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். எதைத் தொட்டாலும் நஷ்டம் நஷ்டம் என்று கஷ்டப்பட்ட நீங்கள் இனி பெரிய அளவில் லாபத்தில் புரளப் போகிறீர்கள். கஷ்டம் எல்லாம் உங்களை விட்டு விலகி செல்லப் போகின்றது. இனி கவலை வேண்டாம். படிப்படியான முன்னேற்றமும் லாபமும் உங்களை நெருங்கி வரும். வேலை செய்யும் இடத்தில் எடுத்த கெட்ட பெயர் எல்லாம் விலகி நல்ல பெயர் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நாளை சிவராத்திரியுடன் வரும் சனி பிரதோஷத்தன்று இந்த இரண்டு விஷயங்கள் செய்தால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியால் ரொம்பவும் கஷ்டத்தை அனுபவித்து வந்தார்கள். அந்த கஷ்டங்கள் எல்லாம் இனி படிப்படியாக குறையும். குறிப்பாக குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். கடன் சுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர போகிறீர்கள். இனி உங்களுக்கு வரப்போகும் காலம் ஒளிமயமான எதிர்காலமாகத்தான் இருக்கும்.

- Advertisement -