விநாயகருக்கு தேங்காயை இப்படி உடைத்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் சிதறு தேங்காய் போல சிதறிவிடும்.

vinayagar
- Advertisement -

வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவுகாலம் பிறக்காதா என்று தான் நாம் இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சில பரிகாரங்களையும் செய்கின்றோம். அந்த வரிசையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத துயரங்களுக்கு தீர்வு கிடைக்க, மிக மிக சுலபமான இரண்டு பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மனநிறைவோடு இந்த பரிகாரங்களை செய்துவந்தால் தீராத கஷ்டத்திற்கு அந்த ஆண்டவன் சீக்கிரத்திலே தீர்வை காட்டிக் கொடுப்பான். சரி, அந்த இரண்டு பரிகாரங்கள் என்னென்ன தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

lemon-rice1

முதல் பரிகாரம். பசியோடு இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. சாப்பாடு வாங்கிக் கொடுப்பதை நீங்கள் பரிகாரமாக செய்யவில்லை என்றாலும், ஒரு உதவியாக நினைத்தும் செய்யலாம். இந்த தானத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

தினமும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் எலுமிச்சைபழ சாதனை பசியோடு இருப்பவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். தினமும் இந்த தானத்தை செய்ய முடியாதவர்கள் உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உங்கள் வீட்டில் இந்த எலுமிச்சை சாதத்தை தயார் செய்தும் கொண்டு போய் தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் கடையில் இரண்டு பொட்டலங்களை வாங்கி பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கும் தானமாக கொடுத்தாலும் சரி.

annadhanam 1

ஆனால் குறிப்பிட்ட நேரமாக மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் இந்த தானத்தை கொடுப்பது உங்களுடைய தீராத துயரங்களை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். (எலுமிச்சை சாதம் தான் தானம் தரவேண்டுமா. வேறு ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்ற கேள்வி கட்டாயம் எழும்.)

- Advertisement -

நீங்கள் எதை மனதார நினைக்கின்றீர்களோ அதை கூடிய சீக்கிரத்திலேயே நிறைவேற்றித் தரக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்திற்கு உண்டு. அந்த வரிசையில் எலுமிச்சம்பழ சாதத்தை தானமாக கொடுக்கும் போது உங்களுக்கு என்ன விஷயம் தேவையோ அதை மனதார நினைத்துக்கொள்ளுங்கள். கூடிய விரைவில் அது நடக்கும்.

shivan

இரண்டாவது பரிகாரம். அடுத்தபடியாக வீட்டு பூஜை அறையில், ஒரு திங்கட்கிழமை அன்று ஒரு வெற்றிலை, அந்த வெற்றிலைக்கு மேலே ஒரு தேங்காயை வைத்து சிவபெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்க்கு முன்பாக அமர்ந்து சிவபெருமானிடம் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, திஙங்கட் கிழமை அன்றே  இந்த தேங்காயை எடுத்துக் கொண்டுபோய், விநாயகர் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து விட்டால் உங்களை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வெற்றிலையை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.

karpaga-vinayagar

முயற்சி செய்து பாருங்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் 2 பரிகாரங்களும் சுலபமாக ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான். இரண்டு பரிகாரத்திற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கிடையாது. உங்களால் 2 பரிகாரங்களையும் செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். இல்லை ஏதாவது ஒன்று தான் செய்ய முடியும் என்றாலும் ஒரு பரிகாரத்தை செய்து பலனடையலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -