வியாபாரம் செய்யும் இடத்தில் செல்வ வளம் கொழிக்க, சில்லறை காசுகள் எல்லாம் கட்டுக்கட்டாக நோட்டு பணமாக மாற, இதோ இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வையுங்கள் போதும்.

vilakku
- Advertisement -

பொதுவாகவே ஒரு வியாபாரம் என்று இருந்தால் அந்த இடத்தில் ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள் நிச்சயமாக இருக்கும். ஒரு தொழில் என்றைக்குமே தொடர்ந்து லாபத்தை கொடுக்காது. இன்று சொந்த தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள், ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் அந்தத் தொழிலில் சரிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்யும். ஆகவே இந்த ஏற்ற இறக்கங்களை கண்டு சொந்த தொழில் நடத்துபவர்கள் பயப்படவே கூடாது. எதற்கும் துணிந்து தான் சொந்த தொழிலில் காலடி எடுத்து வைக்க வேண்டும். நஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.

செய்யும் தொழில் தொடர் நஷ்டத்தில் இயங்குகிறது. தொழிலை லாபத்தில் இயக்க ஆன்மீகத்தில் ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்பவர்களுக்கு இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம்.

- Advertisement -

வியாபாரத்தில் லாபம் தரும் சில்லறை காசு தீபம்:
பித்தளையில் ஒரு தாம்பல தட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அந்த தாம்பல தட்டு நிரம்ப சில்லறை காசுகளை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய் நாணயம், இரண்டு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம், என்று உங்களிடம் இருக்கும் நாணயங்களை அந்த தட்டில் பரப்பி வைக்க வேண்டும். நடுவில் விளக்கு வைப்பதற்கு ஒரு சின்ன இடம் தேவை. நாணயத்திற்கு மேலே விளக்கை வைக்க வேண்டாம். விளக்கை சுற்றி நாணயத்தை கொட்டி வைத்து நடுவே ஒரு விளக்கு வைக்க வேண்டும்.

வெள்ளி விளக்கு வைக்கலாம். பித்தளை விளக்கு வைக்கலாம். மண் அகல் விளக்கு வைக்கலாம் இந்த மூன்று விளக்குகளுமே அகல் விளக்கு போன்ற தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தால் அந்த தீபச்சுடரின் ஒளி சுற்றி இருக்கும் சிலரை காசுகளின் மேல் பட வேண்டும். ஜோதி விளக்கு என்று சொல்லுவார்கள் அந்த தீபம் ஏற்றினால் இன்னும் இன்னும் சிறப்பு.

- Advertisement -

தினமும் தொழில் செய்யும் இடத்திற்கு வந்த பிறகு பூஜை அறையில் உள்ள படத்திற்கு புதுசாக வாசனை மிகுந்த பூக்களை போட்டு விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அந்த விளக்கில் இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை போட்டு மகாலட்சுமியையும், குல தெய்வத்தையும் நினைத்து அந்த விளக்கை ஏற்றி வைத்து விட வேண்டும். இந்த விளக்கு நாள் முழுவதும் எறிந்தாலும் தவறு கிடையாது. எண்ணெய் தீர தீர ஊற்றி வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு மணி நேரம் அந்த விளக்கு எரிந்த பின்பு விளக்கை குளிர வைத்து விடுங்கள்.

தினமும் இந்த சில்லரை காசுகள் நிரம்பி இருக்கும் தட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியிடம் தொழிலில் லாபம் பெருக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாலே போதும். உங்களுடைய தொழிலில் இருக்கும் நஷ்டம் படிப்படியாக குறைந்து லாபம் படிப்படியாக பெருக தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லையால் தினம் தினம் கஷ்டப்படுகிறவர்கள் துளசி செடிக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த எளிமையான வழிபாடு செய்தாலே போதும். பண புழக்கம் அதிகரித்து கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று பசும்பாலில் செய்த பால் பாயாசம் நெய்வேதியமாக வைக்க வேண்டும். அந்த பால் பாயாசத்தை உங்கள் இடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சாப்பிட பிரசாதமாக கொடுக்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப நல்ல பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். நீங்களும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பெரிய தொழில் அதிபராகலாம் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -