கடன் தொல்லையால் தினம் தினம் கஷ்டப்படுகிறவர்கள் துளசி செடிக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த எளிமையான வழிபாடு செய்தாலே போதும். பண புழக்கம் அதிகரித்து கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

- Advertisement -

நாம் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை விட, கடன் பிரச்சனை இன்றி வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். மேலும் நாம் சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் தங்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நம் வீட்டில் வளர்க்கக் கூடிய ஒரு செடி உதவுகிறது. அந்தச் செடி என்னவென்றும் அதில் செய்யக் கூடிய வழிபாட்டு முறை என்னவென்றும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

நாம் அனைவரும் நம் வீட்டில் குறிப்பிட்ட சில செடிகளை கண்டிப்பாக வளர்ப்போம். அவற்றுள் மிகவும் முக்கியமாக கருதப்படுவது துளசி செடி ஆகும். இந்த துளசிச் செடியை நாம் தெய்வமாக பாவித்து அதற்கு விளக்கேற்றி பூஜையும் செய்து வருவோம். மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் இந்த துளசி செடி சுத்தமான இடத்திலேயே வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இந்த துளசிச் செடியில் நாம் பல வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு வழிப்பாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடன் அடைய வழிபாடு:
இந்த வழிபாட்டை நாம் அமாவாசை நாளில் தான் மேற்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் சுத்தமான தண்ணீர், பசும்பால் மற்றும் நாணயம். அமாவாசை நாள் அன்று ஏதாவது ஒரு நாணயத்தை எடுத்து (அதாவது 1 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டை செய்ய முதலில் துளசி செடியின் அடியில் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு ஒரு சுத்தமான டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் முக்கால் பங்கு சுத்தமான தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அந்த தண்ணீர் உடன் சுத்தமான காய்ச்சாத பசும்பால் 3 டேபிள் ஸ்பூன் ஊற்ற வேண்டும். இப்பொழுது இந்த தண்ணீர் கலந்த பாலை துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் ஊற்றும் அந்த தண்ணீர் நாணயத்தில் படும்படி உற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி அபிஷேகம் செய்த பிறகு அந்த நாணயத்தை எடுத்து நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்த பின் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாம் ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை நாளில் இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் எப்பேர்பட்ட வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஆஞ்சநேயரை இப்படி வழிபாடு செய்யுங்கள். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல உருகி விடும்.

இவ்வாறு நாம் வழிபடுவதால் நமக்கு இருக்க கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் நாம் சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் நிரந்தரமாக தங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த துளசி வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து கடன் இல்ல நிம்மதியான வாழ்வை வாழலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -