இந்த சத்தம் உங்களுடைய வீட்டில் எப்போதெல்லாம் கேட்கிறதோ, அப்போதெல்லாம் குபேரரின் கடைக்கண் பார்வை உங்கள் மீது விழும். பிறகு வீட்டில் பண மழைதான்.

- Advertisement -

பூஜைகள் வேண்டாம், பரிகாரங்கள் வேண்டாம். மந்திரங்கள் வேண்டாம். பணம் காசை நம் பக்கம் ஈர்க்க இந்த ஒரு வேலையை நாம் செய்தாலே போதும். நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் வீட்டிலிருந்து காணாமலேயே போய்விடும். குபேரனது கடைக்கண் பார்வை ஒரே ஒருமுறை நம்மீது பட்டால் கூட போதும். வாழ்நாள் முழுதும் கஷ்டம் என்பது நமக்கு வராது. அந்த குபேரரை எப்படி நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பது. குபேரருக்கு பிடித்த அந்த சத்தம் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

coins

இந்த சத்தம் குபேரருக்கு மட்டுமல்ல நமக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த சத்தம் தாங்க. குபேரருக்கு ரொம்ப பிடித்த சத்தம் என்றால் என்ன காசுதான். காசியிலிருந்து ஒரு சத்தம் எழுப்ப முடியுமென்றால், நோட்டில் இருந்து சத்தம் வராது. ஆனால் நாணயத்தில் இருந்து சத்தம் வருமே. அந்த சத்தத்தை கேட்க யாருக்கு தான் பிடிக்காது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் எப்போதுமே கட்டு கட்டாக நோட்டு இருக்கின்றதோ இல்லையோ, நாணயங்கள் கட்டாயமாக இருக்கவேண்டும். அதாவது சில்லரை காசுகளை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு புழுக்கத்தில் வைத்து இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு வருமானம் உயர்ந்து கொண்டே இருக்கும். யாராவது வியாபாரம் செய்ய உங்களிடம் வருகிறார்கள். உதாரணத்திற்கு காய்கறியோ அல்லது பூவோ வாங்குகிறீர்கள். 15 ரூபாய்க்கு 12 ரூபாய்க்கு பொருட்களை வாங்குவீர்கள். மீதி மூன்று ரூபாய், எட்டு ரூபாய் இப்படி சில்லரை காசுகள் கேட்பார்கள் அல்லவா, அதை நீங்கள் இல்லை என்று உங்களுடைய வாயால் சொல்லவே கூடாது.

coins

புரிகிறதா, நிறைய பேரிடம் நம் வழக்கத்தில் சொல்லி இருப்போம். ‘என்னிடம் சில்லரை இல்லை’ என்று, அந்த வார்த்தையை இனி சொல்லாதீங்க. சில்லரை காசுகளை எப்போதுமே நிரம்ப நிரம்ப வீட்டில் வைத்துக் கொண்டே இருங்கள். உங்கள் கையில் சில்லரைகளை எப்போதும் வைத்துக் கொண்டே இருங்கள். அதன் பின்பு செல்வம் உங்களை தேடி வந்து கொண்டே இருக்கும். குபேரரது கடைக்கண் பார்வை உங்கள் மீது விழ வேண்டும் என்றால் உங்கள் கையில் எப்போதும் சில்லரை காசுகள் நிறைவாக இருக்க வேண்டும். இது முதல் விதி.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் சில்லரை காசுகளை மொத்தமாக போட்டுக்கொள்ளுங்கள். 51 நாணயங்கள் இருந்தாலும் சரி, 101 இருந்தாலும் சரி அது உங்களுடைய சவுகரியம். இந்த நாணயங்களுக்கு நடுவே சிறிய குபேரர் பொம்மையை வைத்து விடுங்கள். தினந்தோறும் உங்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அந்த சில்லறை காசை, உங்களுடைய கையில் எடுத்தபடி அப்படியே சத்தம் எழுப்புங்கள். அந்த சத்தத்தை ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 முறை உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சில்லறைச் சத்தத்தை வீட்டில் எழுப்பலாம்.

five-rupee-coins

இந்த சப்தம் ஒவ்வொருமுறை உங்களுடைய வீட்டில் கேட்கும்போதும், குபேரர் உங்களை திரும்பி பார்த்துக் கொண்டிருப்பார். உங்களுக்கான பணம் காசை குறையாமல் கொடுத்துக் கொண்டே இருப்பாராம். நம்ப முடியவில்லையா. நம்முடைய வீட்டில் முயற்சி செய்து தான் பார்ப்போமே. குபேரரது கடைக்கண் பார்வை நம் மீது விழுவதற்கு இத்தனை சுலபமான பரிகாரம் நமக்கு தெரிந்ததே ஒரு பாக்கியம் தானே. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -