அனைவருக்கும் பிடித்த தயிர் வடையை இப்படி செய்து கொடுத்தால், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைவரும் சாப்பிட்டு முடிப்பார்கள்

THAIRVADAI
- Advertisement -

தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. உளுந்த வடை செய்து அதனை  தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். கடையில் செய்வது போன்ற அதே சுவையுடன் செய்வதற்கு ஒரு சில குறிப்புகளை நாம் சரியாக செய்தாலே போதும் சுவையான தயிர் வடை செய்து வீட்டில் உள்ள அனைவரது பாராட்டுகளையும் பெறலாம்.  சுவையான தயிர் வடை நீங்களும் ஒருமுறை செய்து சுவைத்து மகிழுங்கள். வாருங்கள் இதெல்லாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு –  1 கப், எண்ணெய்  – 250 கிராம், தயிர் – 1 லிட்டர், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 1, இஞ்சி – 1  துண்டு, பச்சை மிளகாய் – 2, உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி 2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின்னர் கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

மாவு வெந்து பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.
இதே போல எல்லா மாவிலும் வடை செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் 3 ஸ்பூன் தயிர் சேர்த்துக்  கலக்கவும். பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

- Advertisement -

ஒரு லிட்டர் தயிரை கட்டிகளில்லாமல் அடித்துக் கொள்ளவும். ஒரு பானில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு,  1 ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

இவற்றை ஓரளவு வதக்கிய பின்னர் தயாராக வைத்துள்ள தயிரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாக ஒரு ட்ரேயில் அடுக்கி கொள்ளவும். அதன்மீது தாளித்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும். நன்றாக கலந்த பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். ஊறிய பின்னர் பரிமாறவும் சுவையான தயிர் வடை தயாராகிவிட்டது.

- Advertisement -