முருகர் வழிபாட்டிற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே. இதைத் தெரிந்து கொண்டால் உங்கள் வம்சத்திற்கே புண்ணியம் சேரும்.

prayingman-murugan
- Advertisement -

முருகர் வழிபாட்டை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால், இந்த முருகர் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாள் என்றால் கிருத்திகை என்று சொல்லுவார்கள். அதாவது கார்த்திகை நட்சத்திரம் முருகருக்கு உகந்த நட்சத்திரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த நட்சத்திரத்தை தவிர, இன்னொரு நட்சத்திரம் கூட முருகர் வழிபாடு செய்ய உகந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அது என்ன நட்சத்திரம் என்று உங்களுக்கு தெரியுமா. அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் முருகர் கோவிலுக்கு சென்று எழுப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முருகர் வழிபாட்டின் சிறப்பு:
முருகரை விசாக நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் மிக மிக நல்லது. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகர் கோவிலுக்கு விசாக நட்சத்திரத்தன்று செல்லுங்கள். முருகனுக்கு கற்கண்டு நிவேதனமாக வைத்து, பூக்களை வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அரளிப் பூக்கள் வாங்கி உங்கள் கையால் மாலை தொடுத்து போட்டால் அவ்வளவு சிறப்பு. இல்லை என்றால் முல்லைப்பூ கிடைக்கும் போது முல்லைப் பூக்களை தொடுத்து முருகனுக்கு மாலை சூட்டுங்கள்.

- Advertisement -

முருகரை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்த மாதம் வர கூடிய விசாக நட்சத்திரத்திற்குள் உங்களுடைய வாழ்வில் நிச்சயம் ஒரு அதிசயம் நடப்பது உறுதி. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடு தான் இந்த விசாக நட்சத்திரத்தில் முருகரை வழிபாடு செய்வது. எந்த நல்லது நடக்க வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கடன் தீர, தொழிலில் சிறக்க, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, பிள்ளைகள் நன்றாக படிக்க, சொத்து சுகம் நிலம்புலம் வண்டி வாகனம் வாங்க, இப்படி எதை நினைத்து வேண்டுதல் வைத்தாலும் அது பலிக்கும்.

அதேபோல விசாக நட்சத்திரத்தன்று வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, உங்கள் கையால், உங்களால் முடிந்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். விசாக நட்சத்திர தினத்தன்று நீங்கள் செய்யும் இந்த அன்னதானம் உங்கள் சந்ததியினரின் தலைகாக்க கூடியது. நீங்கள் செய்யக்கூடிய இந்த புண்ணிய காரியம் உங்கள் தலைமுறையை வாழ வைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர்களை தேடி கண்டுபிடிங்கள். விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள் முருகன் அம்சம் கொண்டவர்கள். அவர்களுடைய கையால் ஒரு சின்ன முருகர் படமோ அல்லது சிலையோ வாங்கி உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் உங்களுக்கு யோகம் அளிப்பது நிச்சயம். உங்கள் காசு கொடுத்தே முருகரின் படம் வாங்கலாம். ஆனால் அதை விசாக நட்சத்திரம் கொண்டவர்களுடைய கையில் கொடுத்து, அதன் பின்பு நீங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தால் அந்த முருகர் சிலைக்கு தனி பவர் தான்.

இதையும் படிக்கலாமே: இப்படி கட்டி வைத்த பணம் வீண் செலவு ஆவதற்கு வாய்ப்பே இல்லை. வீண் செலவை குறைக்க ஆன்மீகம் சொல்லும் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

முருகரை விரும்பி வழிபாடு செய்பவர்கள், முருகரை நம்புபவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -