இப்படி கட்டி வைத்த பணம் வீண் செலவு ஆவதற்கு வாய்ப்பே இல்லை. வீண் செலவை குறைக்க ஆன்மீகம் சொல்லும் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

cash3
- Advertisement -

இன்று பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் கஷ்டம் என்றால், சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்யாமல் எடுத்து வைப்பது மிகப்பெரிய கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிறது. அதில் தேவையான செலவை மட்டும் செய்து விட்டு மீதி பணத்தை சேமிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல்தான் செலவு வரிசை கட்டி நிற்கும். பார்க்கப் போனால் அந்த 50,000 ரூபாயில் அத்தியாவசியமான செலவு என்று பார்த்தால் 20,000 கூட இருக்காது. மீதி 30,000 வீண் விரயமாகத்தான் செலவழித்து இருப்போம். அந்த 30,000 சேமித்து வைத்திருந்தால் அடுத்த மாதம் உதவியாக இருந்திருக்கும்.

அடுத்த மாதம் நமக்கு வருமானம் பூஜ்ஜியமாக இருக்கும். வருமானம் இல்லாத மாதத்தை சரி கட்ட, கடன் வாங்கி செலவு செய்வோம். எதற்கு இந்த முட்டாள்தனம். வீண் செலவை குறைத்து பாருங்கள். நிச்சயமாக பணம் சேமிப்பில் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தாது. அந்த காலத்தில் வாழ்ந்த பாட்டிமார்கள் பணத்தை சுருக்கு பையில் இருக்க கட்டி வைத்திருப்பார்கள். அவர்கள் அந்த சுருக்கப் பையில் இருந்து மிக மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் பணத்தை எடுத்துக் கொடுப்பார்கள். அனாவசிய செலவுக்காக சுருக்கு பையில் கட்டி இருக்கும் பணம் வெளியில் வரவே வராது எக்காரணத்தைக் கொண்டும்.

- Advertisement -

அதனால்தான் அவர்களுடைய வாழ்வு சிறப்பாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில், இன்றைய கலாச்சாரத்தில், நமக்கான செலவு அதிகரிப்பது என்பது இயல்புதான். இருப்பினும் கட்டுப்பாடு நம் கையில் இருக்க வேண்டும். கட்டுப்பாடோடு நடக்கக்கூடிய குடும்பம் நிச்சயமாக கட்டுக்கோப்பாகத்தான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் கெட்டுப் போகாது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

வீண் செலவை குறைக்கும் விரலி மஞ்சள் பரிகாரம்:
உங்களுடைய வீட்டில் செலவு போக மீதம் கொஞ்சம் ரூபாய் இருக்கிறது. அந்த தொகையை ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய விரலி மஞ்சள் எடுத்து, அந்த மஞ்சளையும் ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். இப்போது இந்த விரலி மஞ்சளை, ரூபாய் நோட்டோடு வைத்து மீண்டும் ஒரு கட்டுப்போட்டு விட்டால், உங்களுடைய பணம் வீண் செலவு ஆகவே ஆகாது.

- Advertisement -

விரலி மஞ்சளை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, இந்த பணம் வீண் செலவு ஆகக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, குலதெய்வத்தை வேண்டி இந்த முடிச்சை கட்டி விடுங்கள். இப்படி விரலி மஞ்சளுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்ட பணம், உங்கள் வீட்டிலேயே நிலையாக தங்கும். பணம் தங்குவதற்கு மிக மிக எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே: பணத்தை வாரி வழங்கும் சுக்கிர பகவானையே வசியம் செய்ய ஜவ்வாதை இந்த பொருளுடன் சேர்த்து வையுங்கள். அப்புறம் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சுக்கிர திசை தான்.

2000 ரூபாயை எடுத்து அதை இப்படி விரலி மஞ்சளால் கட்டி வைத்து தான் பாருங்களேன். அந்த 2000 ரூபாய் என்ன வேலை செய்கிறது என்று உங்களுக்கே தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் முழு நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -