இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்

sivan7
- Advertisement -

சிவ சிவ என்ற மந்திரத்தை சொன்னாலே இன்னல்கள் விலகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில், ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான இன்னல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு தர தனித்தனியாக சிவ மந்திரங்கள், ஒவ்வொரு வரியில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

அந்த மந்திரங்களை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில், எந்த நேரத்தில் உங்களுக்கு எந்த மந்திரம் தேவையோ, அந்த மந்திரத்தை சொல்லும் தருவாயில், சிவபெருமான் வந்து உங்களை உடனடியாக காப்பாற்றுவார். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அந்த ஒரு வரி மந்திரங்களை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கஷ்டங்களை தீர்க்கும் சிவ மந்திரங்கள்

மரண பயம் நீங்க எமனையும் வெல்ல ‘ஓம் நசி மசி’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். எதிரிகளை வீழ்த்தி மன்னனையும் மண்ணாக்கக் கூடிய மந்திரம் ‘ஓம் மசி நசி’.

‘ஓம் நங் நங்’ என்றால் கெட்ட நேரத்திலும் கூட உங்களுக்கு நன்மை நடக்கும். ‘ஓம் அங் அங்’ என்ற மந்திரத்தைச் சொன்னால் கெடுதல் ஒருபோதும் உங்களை நெருங்காது.

- Advertisement -

கொடூரமான மிருகங்கள் உங்களை நெருங்கும் சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொண்டால் ‘ஓம் சிங் சிங்’ என்ற சிவ மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் வங் வங்’ என்றால் இந்த உலகமே உங்களுக்கு வசியமாகிவிடும்.

‘ஓம் வசி வசி’ என்று சொன்னால் எப்படிப்பட்ட முரண்டு பிடிக்கும் மனிதர்களும் உங்களுக்கு வசியம் ஆவார்கள். ‘ஓம் நசி நசி’ என்றால் உங்களைப் பிடித்த பீடை உடனே விலகும். விஷ ஜந்து கடித்து விட்டது உடம்பில் விஷத்தால் எந்த பிரச்சனையும் உயிருக்கு வரக்கூடாது. விஷம் உடனே உடம்பை விட்டு இறங்கனும் என்றால் ‘ஓம் மசி மசி’ என்று சொல்லுங்கள்.

- Advertisement -

‘ஓம் அசி அசி’ என்று சொன்னால் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் கொழிக்கும். ‘ஓம் உசி உசி’  என்றால் செல்வ வளம் அழிந்து போகும். ‘ஓம் மசி நசி நசி மசி’ என்றால் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனியம் செய்வினை தெரிந்தோடிவிடும். ‘ஓம் சிவ சிவ’ என்றால் தீ வினைகள் எல்லாம் அழிந்து போகும்.

இதையும் படிக்கலாமே: ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

மனிதர்களாக இருப்பவர்களுக்கு எப்படி எல்லாம் இன்னல்கள் வருமோ, அந்த இன்னல்களுக்கு எல்லாம் தனித்தனியாக மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒருவரி மந்திரத்தை எளிமையாக நினைவு வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது தேவைப்படக்கூடிய சூழ்நிலையில் உச்சரித்தால் அந்த சிவபெருமான் வந்து உங்களை காப்பாற்றி விடுவார். தவிர அடுத்தவர்களை கெடுக்கும் நோக்கத்தில், தவறான எந்த விஷயத்துக்கும் இந்த மந்திரத்தை உபயோகப்படுத்தக் கூடாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -