சிவன் அருள் பெற சிவ மந்திரம்

sivan manthiram
- Advertisement -

இந்த மாதம் 8.3.2024 மகா சிவராத்திரி தினம் வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் பக்தர்கள் அனைவரும் நாள் முழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் சிவனையை மனதார நினைத்து அவர் அருள் பெற வழிபாடுகளை செய்து முடித்திருப்பார்கள். சிவபெருமானுக்கு அன்றைய நாளில் விரதம் இருக்கும் சரியான முறை என்றால் ஊன் உறக்கம் இல்லாமல் அவரை வழிபடுவது தான்.

இன்றைய காலக்கட்டத்தில் பலரால் இந்த முறையிலான விரதத்தை கடைபிடிக்க முடிவதில்லை. எல்லோரும் ஏதேனும் ஒரு உடல் நல குறைவால் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராலும் பணி சூழ்நிலை போன்ற காரணங்களால் இது போன்ற விரதங்களை மேற்கொள்ள முடிவதில்லை. ஆகையால் ஆலயத்திற்கு செல்வது வழிபாடு செய்வதோடு நிறைவு செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

இப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் விரதம் இருந்த பலனை பெறவும், விரதம் இருந்தவர்கள் கூடுதல் பலனை பெரும் ஒரு அற்புதமான மந்திரம் கூறும் வழிபாட்டு முறை உள்ளது. அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சிவன் அருள் பெற மந்திரம்

இந்த வழிபாட்டை இன்றைய இரவுகுள் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் செய்து கொள்ளுங்கள். ஆனால் இந்த வழிபாட்டை அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து வழிபாடு செய்வது அத்தனை உசிதமாக இருக்காது.

- Advertisement -

அதே போல் இன்று ஆலயத்தில் இந்த வழிபாடு செய்ய நினைப்பவர்கள் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும் அதுவும் முக்கியமானது. இன்றைய தினத்தில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவாலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் போது மறக்காமல் நல்லெண்ணெய் வாங்கி செல்லுங்கள். இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு முன் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும்.

நல்லெண்ணையானது நம்முடைய பாவங்களையும், கர்மாக்களையும் நீக்கி நம்மை தூய்மைப்படுத்த நாம் கோவிலுக்கு தானமாக செய்வது. சிவராத்திரி என்பதும் இதே போன்று தான் நம்முடைய பாவங்களை தீர்த்து புண்ணியத்திற்கான வழி தேடிக் கொள்ளும் ஒரு வழிபாடு தான். இதை வாங்கித் தந்த பிறகு சிவாலயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து மனதார இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் சிவ சிவ சிவாய நமக

என்ற இந்த மந்திரத்தை 308 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் போது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து சொல்லுங்கள். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் நல்லெண்ணெய் தானமும் சிவபெருமானை நினைத்து சொல்ல கூடிய இந்த மந்திரமும் மகா சிவராத்திரி விரதம் இருந்த பலனை முழுவதுமாக பெற்றுத் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்

அது மட்டும் இன்றி உங்களுடைய பாவங்கள், கர்மாக்கள் தொலைந்து சிவன் அருளோடு நீங்கள் நல்ல நிலையில் வாழ்வதற்கான யோகத்தையும் பெறலாம். அன்றைய தினத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் நம்மால் சிவ வழிபாட்டை செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள், இந்த நாளை தவிர விடாமல் வழிபாடு செய்து சிவன் அருளை முழுமையாக பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -