குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்

vinayagar childrens
- Advertisement -

பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான். அதற்கு தேவையான படிப்பை அவர்களுக்கு தர தான் இன்று ஒவ்வொரு பெற்றோரும் தினம் தினம் பாடுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி செய்தாலுமே கூட எல்லா பிள்ளைகளும் நல்ல முறையில் படித்து ஆளாவதில்லை.

ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்தால் ஒரு சில பிள்ளைகள் சற்று வந்த நிலையில் தான் இருக்கிறார்கள். இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். சில குழந்தைகள் தங்களுடைய சோம்பேறித்தனத்தினால் படிப்பில் அக்கறையில்லாமல் இருக்கலாம் சில பிள்ளைகளுக்கு இயற்கையிலேயே புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருக்கும்.

- Advertisement -

இது மட்டும் இன்றி கிரக கோளாறு போன்ற பல்வேறு காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு காரணங்கள் என்னவாயினும் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படி சரியாக படிக்காத பிள்ளைகளையும் நல்ல முறையில் படிக்க வைக்க கூடிய ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பிள்ளைகள் நன்றாக படிக்க மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி அன்று செய்வது சிறந்தது. சங்கடஹர சதுர்த்தி அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி இந்த ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும். இதைத் தவிர மற்ற நாட்களில் தினமும் விநாயகர் முன்பு தீபம் ஏற்று வைத்து இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும். அது என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு வெள்ளெருக்கம் விநாயகர் இருந்தால் மிகவும் நல்லது. இதை வாங்க முடிந்தவர்கள் ஒரு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் விநாயகர் படம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தட்டில் சிறிதளவு பச்சரிசியை பரப்பி அதன் மேல் அகல் விளக்கு ஒன்றை வையுங்கள்.

அந்த அகல் விளக்கு பசு நெய் ஊற்றி வெள்ளெருக்கு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகருக்கு பிடித்த எளிமையான நெய்வேத்தியம் ஒன்று செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு காலை மாலை இரண்டு வேளையும் செய்ய வேண்டும். இந்த தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும் நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஓம் கணேசாய நமக

என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை பிள்ளைகளின் பெற்றோர்கள் சொல்லுங்கள். பிள்ளைகளையும் உடன் அமர வைத்து சொல்ல சொன்னால் மிகவும் நல்லது. பிள்ளைகள் சொல்லக் கூடிய நிலையில் இல்லை அல்லது சொல்ல மாட்டார்கள் என்றால் பெற்றோர்களை இதை செய்யலாம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் பணப் பிரச்சனை தீர பரிகாரம்

புத்தியை தரக் கூடிய விநாயகயை இந்த முறையில் வழிபாடு செய்து வரும் பொழுது மந்த புத்தி உள்ள பிள்ளைகள் கூட சுறுசுறுப்பாகி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பிள்ளைகள் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் விநாயகரை எந்த முறையில் மந்திரம் சொல்லி வழிபட்டால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -