பேரழகின்னா அது நீங்க தான்னு ஊரே உங்களைப் பார்த்து சொல்றஅளவுக்கு அழகா மாற வெறும் பத்து ரூபாய்க்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த பொருள் இருந்தா போதும்.

- Advertisement -

கருமையான முகத்தை நல்ல நிறமாக மாற்ற இப்போதெல்லாம் என்னென்னவோ கிரீம், சீரம், சோப், ஆயில் என வகை வகையாக கடைகளில் கிடைக்கிறது. இவற்றையெல்லாம் பயன்படுத்துவதால் நம்முடைய நிறம் தற்காலிகமாக மாற்றுமே தவிர நிரந்தரமாக நிறத்தை அதிகரித்து தராது. அது மட்டும் இன்றி இவற்றை பயன்படுத்துவதனால் நமக்கு நாளடைவில் சரும பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள சீரத்தை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளும் போது கெமிக்கல் கலக்காததால் எந்த பின் விளைவுகளும் ஏற்படாது என்பதோடு அனைவருமே செய்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாகவும் அதிக செலவில்லாமலும் இருக்கும். அந்த சீரத்தை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முகம் எப்பொழுதும் பளிச்சென்று அழகாக இருக்க சீரம்
இந்த சீரம் தயாரிக்க நமக்கு தேவையான அதி முக்கியமான ஒரு பொருள் அதிமதுரம். இந்த அதிமதுரத்தை நாட்டு மருந்து கடைகளில் ஒரு பத்து ரூபாய் அளவிற்கு வாங்கி வைத்துக் கொண்டால் போதும். இதுவே நமக்கு ஒரு வாரத்திற்கு தேவையான சீரத்தை தயாரிக்க போதுமானதாக இருக்கும். அடுத்து இதில் சேர்க்கக் கூடிய இன்னொரு பொருள் அரிசி கழுவிய தண்ணீர். அடுத்து தேன் இவை மூன்றும் இருந்தாலே போதும் அருமையான சீரத்தை தயார் செய்து விடலாம்.

- Advertisement -

இந்த சீரம் தயாரிக்க முதலில் அடுப்பில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பிறகு சூடானதும் அதிமதுரத்தை அதில் சேர்த்து விடுங்கள். அதிமதுரம் நன்றாக கொதித்து நிறம் மாறத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே ஆற விடுங்கள். இந்த அதிமதுரத்தின் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கி தண்ணீர் தேன் கலரில் மாறி விடும். அதன் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் (இதற்கு இரண்டாவது முறையாக அரிசி கழுவும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்) இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றும் கலந்த பிறகு இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருக்காமல் வேறு புதிதாக செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சீரத்தை இரவு படுக்கும் முன்பு உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்படியே முழு இரவும் விட்டு விடலாம், பிடிக்காதவர்கள் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவிய பிறகு உறங்க செல்லலாம். இரவில் போட முடியாதவர்கள் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக உங்கள் முகத்தில் இந்த சீரத்தை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். ஆனால் இரண்டு மூன்று தடவை செய்து கொள்ளுங்கள் அப்போது தான் சீரம் நம் சருமத்தின் உள் இறங்கி நன்றாக வேலை செய்யும்.

இதையும் படிக்கலாமே: உங்க முடி 2 மடங்கு வேகமாகவும், 2 மடங்கு அடர்த்தியாகவும் வளர, இந்த ஒரு பேக் மட்டும் போதும். இரண்டே மாதத்தில் ரிசல்டை இன்ச் டேப் வைத்து அளந்து பார்க்க சேலஞ்ச் கொடுக்கும் ஹேர் பேக் இது.

இந்த சீரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது வெயிலினால் ஏகப்பட்ட கருப்பு, கண் கருவளையம், முகத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் இருக்கும் கருந்திட்டுகள் அனைத்தும் நீங்கி சருமம் ஒரே சீரான நிறத்துடன் பார்க்க அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். அதிக செலவில்லாத இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த ஒரு சீரம் இருந்தால் போதும் நீங்கள் பேரழகி என்பது சந்தேகமே வேண்டாம்.

- Advertisement -