முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளையும், முகப்பருவினால் ஏற்பட்டிருக்கும் சின்ன சின்ன பள்ளங்களையும் 7 நாட்களில் போக்கக்கூடிய உளுந்து!

pigmentation
- Advertisement -

சில பேருக்கு முகத்தில் பரு வந்து வந்து போகும். ஆனால் அந்த பருவினால் ஏற்படக்கூடிய கருதிட்டும், கரும்புள்ளியும் நிரந்தரமாக முகத்திலேயே தங்கிவிடும். இன்னும் சில நாட்கள் கழித்து பார்த்தால், அந்த இடத்தில் சின்ன சின்ன பள்ளங்கள் உண்டாகி முகம் முழுவதும் அழகு குறைய கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் பெண்களும், ஆண்களும் பல வகையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பல வகையான அழகு சாதன பொருட்களை வாங்கி அந்த பள்ளங்களை மறைத்தாலும், அது நிரந்தரமான தீர்வாகாது.

pimple

பலவகையான செயற்கை க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் முகத்தில் அழகு கூடுவது போல தெரியும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அந்த கரும்புள்ளிகளும், பள்ளங்களும் வெளியில் தெரிய ஆரம்பித்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வு ஒன்று உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு தேவையான பொருள். கருப்பு உளுந்து இரண்டு ஸ்பூன், அதை ஊறவைக்க தேவையான அளவு பசும்பால். பசும்பால் இல்லாதவர்கள் பாக்கெட் பாலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். காய்ச்சாத பாலை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே 2 ஸ்பூன் கருப்பு உளுந்தில் சிறிதளவு பால் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.

karuppu ulunthu

மறுநாள் காலை பாலோடு சேர்த்து அந்த கருப்பு உளுந்தையும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக தடவி விட்டு, ஐந்து நிமிடங்கள் வரை உங்களது கை விரல்களால் நன்றாக தேய்த்து முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு முகத்தில் பூசப்பட்டு இருக்கும் அந்த விழுது நன்றாக காய்ந்து, தோல் இருக்கும் நிலை வர வேண்டும்.

- Advertisement -

1/2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம். தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 7 நாட்களில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். கரும்புள்ளியும், பள்ளங்களும் சிறிதளவு குறைந்த பின்பு, வாரத்திற்கு இரண்டு முறை இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவது நல்லது.

water drink

முகத்தில் கரும்புள்ளிகளும் பருக்களும், பள்ளங்களும் வருவதற்கு முதல் காரணம் நாம் அதிகப்படியான தண்ணீரை பருகாமல் இருப்பது தான். எவ்வளவு தண்ணீரைப் குடிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய தோலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் காத்துக்கொள்ளலாம். குறிப்பாக வெயில் காலங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்குறிப்பு: கருப்பு உளுந்து கிடைக்காதவர்கள் வெள்ளை உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விழுதை ஒரு நாள் தயார் செய்துவிட்டு, அதை பிரிட்ஜில் சேகரித்தும் வைத்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருக்கும் விழுதை பயன்படுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைத்து அரை மணி நேரம் கழித்து, அதன் குளிர்ந்த தன்மை குறைந்த பின்பு, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

ulunthu

இரவு நேரத்தில்தான் உளுந்தை ஊற வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் காலை நேரத்தில் முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி கொள்ள முடியாவிட்டால், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஆனால், உளுந்து பாலில் ஐந்து மணி நேரம் ஊற வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mugaparu karumpulli maraiya tips in Tamil. Mugam alagaga iruka tips. Mugaparu poga tips Tamil. Mugaparu maraiya Tamil. Karumpulli maraiya tips in Tamil.

- Advertisement -