இதை வாயில் வைத்துக் கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது உடனே நடக்கும். கொடுத்த வாக்கு தவறவே தவறாது.

kuppaimeni
- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் வாயால் தான் பிரச்சனையே வரும். வாயை வைத்துக் கொண்டு சும்மாவே இருக்க மாட்டாங்க. எந்த இடத்தில் எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் அவசரப்பட்டு பேசி, வாக்கு கொடுத்துவிட்டு அந்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திணறுவார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில பேருடைய வார்த்தைக்கு மரியாதை என்பதை இருக்காது. ‘நான் பேசுவதை யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க’ அப்படிங்கர கவலையும் சில பேருக்கு உண்டு. சில பேருக்கு பேச்சு திறமையே இருக்காது. ஒரு இன்டர்வியுவில் எப்படி பேசுவது என்று கூட தெரியாது. இப்படி வாயின் மூலம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். இதையெல்லாம் சரி செய்ய என்ன செய்வது. ஒரு அருமையான ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகாரம் உள்ளது. அதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சொல்வாக்கு செல்வாக்கு அதிகரிக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் குப்பைமேனி செடியின் வேர். குப்பைமேனி செடி வீதி ஓரங்களில் எளிமையாக நமக்கு கிடைக்கும். குப்பைமேனி செடியை பிடுங்கும் போது, சாபநிவர்த்தி செய்ய வேண்டும். மஞ்சள் தண்ணீரை அந்த செடியை சுற்றி தெளித்து விட்டு ‘நசி நசி மூலிகை சாபம் நசி’ என்ற வார்த்தையை சொல்லிவிட்டு அதன் பின்பு செடியை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி இந்த நான்கு தினத்தில் இந்த வேரை எடுக்கலாம்.

- Advertisement -

அந்த வேரை எடுத்து சுத்தபத்தமாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த வேர்களை மட்டும் தயார் செய்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான நாள், முக்கியமான வேலை என்று வரும் அல்லவா, அப்போது மட்டும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக ஏதோ ஒரு தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசுவதற்காக வெளியே செல்கிறீர்கள், அல்லது முக்கியமான இன்டர்வியூ அல்லது பஞ்சாயத்து பேச போறீங்க என்றாலும் இந்த வேரை கையில் எடுத்து செல்ல வேண்டும்.

நீங்கள் முக்கியமான விஷயத்தை பேசுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக இந்த வேரை உங்களுடைய வாயில் அடக்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய துண்டு தான், அரை இன்ச் அளவு வேரை வாயில் வைத்துக் கொண்டால் கூட போதும். அப்படியே பல்லில் கடித்துக் கொண்டால், இந்த வேரிலிருந்து சேர்த்து வரும் உமிழ் நீர் நம்முடைய உடம்புக்குள் செல்லும். இது உங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

- Advertisement -

எந்த இடத்தில் எப்படி பேசினால் எந்த காரியம் நடக்கும் என்பதை சரியாக யோகித்து பேச தொடங்குவீர்கள். அதேசமயம் இந்த வேரை வாயில் வைத்துக் கொண்டு நீங்கள் எந்த ஒரு வாக்கை யாருக்கு கொடுத்தாலும் அதை சரியான நேரத்தில் நிறைவேற்றி தரக்கூடிய சந்தர்ப்பமும் உங்களுக்கு அமையும். வாயால் நீங்கள் கெட்டுப் போகவே மாட்டீங்க. உங்கள் பேச்சு திறமையால் நான்கு பேருக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பீர்கள். அந்த அளவுக்கு சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்க கூடிய எளிமையான பரிகாரம் தான் இது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்க, இந்த தை வெள்ளிக் கிழமை நாளை தவறவிடாமல் இன்று மாலை நிலை வாசலில் இதை மட்டும் செய்து விட்டால் போதும்.

இந்த ஒரு பொருளை வாயில் வைத்துக் கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அந்த வார்த்தைக்கு உயிர் இருக்கும். நீங்கள் சொன்ன நல்ல விஷயங்கள் எல்லாம் பலிக்கும். உங்களுடைய பேச்சுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். நல்லதுக்கு மட்டும்தான் இதை பயன்படுத்த வேண்டும். இந்த வேரை வாயில் வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு சாபம் கொடுத்தால் அது பலிக்காது. நல்லதை நினைத்து, நல்லது நடக்க வேண்டும் என்று செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு தான் பலன் உண்டு. ஆகவே இந்த பரிகாரத்தை யாரும் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -