வைகாசி சோமவார அமாவாசை(30/5/2022) உங்கள் ஆசைகள் நிறைவேற செய்ய வேண்டிய வழிபாடு என்ன? ஈரேழு ஜென்ம பாவங்களையும் நீக்கி நினைத்ததை அடைய செய்யும் பரிகாரங்கள்!

tharpanam-amavasai-vinayagar
- Advertisement -

வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு விசேஷமான பலன்கள் உண்டு. அவ்வகையில் திங்கட்கிழமையுடன் கூடிய இந்த சோமவார அமாவாசை தினத்தை மிகுந்த சக்தி வாய்ந்த நாளாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. சோமவாரம் என்றால் திங்கட்கிழமையை குறிக்கிறது. இந்நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாகவும் இருக்கிறது. இந்நாளில் உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்க, ஆசைகள் நிறைவேற, பாவங்கள் நீங்க, நினைத்ததை அடைய செய்ய எந்த மாதிரியான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சோமவார அமாவாசையில் பித்ருக்களுக்கு உகந்த புடலங்காய் பயன்படுத்தி சமையல் செய்வது மிகுந்த விசேஷமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு அமாவாசையிலும் பித்ருக்களை நினைத்து பித்ரு தர்ப்பணம் கொடுப்பது வம்சத்தை தழைக்கச் செய்யும். இந்த சோமவார அமாவாசையில் உங்களுடைய பித்ருக்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து வீட்டிலேயே எளிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இதனால் உங்கள் மனதில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. பித்ரு வழிபாட்டிற்கு நம் ஆசைகளை நிறைவேற்றித் தரக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. நாம் நன்றாக இருக்க வேண்டும், நம்முடைய வம்சம் தழைக்க வேண்டும் என்று முதலில் வந்து நமக்கு உதவி செய்வது பித்ருக்கள்! எனவே பித்ரு வழிபாடு மேற்கொள்ளலாம்.

சோமவாரம் என்றால் லிங்க வழிபாட்டை குறிக்கும் ஒரு அற்புதமான சொல்லாகும். சோமவாரத்தில் லிங்கத்தை வைத்திருப்பவர்கள் அதற்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிருதம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபடலாம். உங்களிடம் எந்த அபிஷேகப் பொருட்கள் இருக்கின்றனவோ அவற்றை வைத்து உங்களுடைய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவ ஸ்தோத்திரங்களை உச்சரித்து, சிவவழிபாடு மேற்கொள்ளலாம். இதனால் ஈரேழு ஜென்ம பாவங்களும் நீங்குவதாக ஐதீகம் உண்டு. எனவே சோமவார அமாவாசையை தவற விட வேண்டாம்.

- Advertisement -

நம்முடைய ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிறைவேறுவதற்கு சோமவார அமாவாசை திதியில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பான ஒரு பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். விநாயகருக்கு உகந்த அரச மர இலைகளை பறித்து வந்து விநாயகருக்கு முன்பாக ஒற்றை படையில் அரச இலைகளை அடுக்கி வைத்து, அதன் மீது ஒற்றை அகல் விளக்கு ஒன்றை வைத்து சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபமேற்றி விநாயகர் மந்திரங்களை உச்சரித்து தேங்காய் உடைத்து வழிபடலாம். இதனால் நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருக்கக்கூடிய வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்கிற ஐதீகம் உண்டு.

அமாவாசை திதியை பித்ரு வழிபாடு, சிவ வழிபாடு மற்றும் விநாயகருக்கு வழிபாடு செய்வது ஒவ்வொரு விதமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். மேலும் பசுவிற்கு வாழைப் பழம், அகத்திக்கீரை, பச்சரிசி-வெல்லம் போன்றவற்றையும் தானம் கொடுத்து வரலாம். இதனால் நீங்கள் சந்திக்கும் தொடர் தோல்விகள் வெற்றியாக மாறக் கூடிய வாய்ப்புகளை பெற்றுத் தரும். இத்தகைய அற்புத சக்தி வாய்ந்த வைகாசி மாத சோமவார அமாவாசை திதியை தவறவிடாமல் இறை வழிபாடுகளை மேற்கொண்டு உங்களுடைய பிரச்சினைகளுக்கு விரைவில் நீங்களும் தீர்வு காணலாமே!

- Advertisement -