புதிதாக சொந்த வீடு, கடை போன்ற வற்றை கட்ட எண்ணுபவர்கள் இதை செய்து விட்டு வேலையை ஆரமித்தால் அந்த இடத்தில் அமோகமான வளர்ச்சி இருக்கும்.

sondha veedu
- Advertisement -

வாடகை வீட்டில் காலங்காலமாக வசிப்பவர்கள் தங்களுக்கென்று சொந்த வீடு கட்டுவதும், பிறரிடம் வேலை செய்வதற்கு பதிலாக தங்களது சொந்த உழைப்பில் முன்னேற விரும்பி, தங்களுக்கென சொந்தமாக ஒரு கடை, தொழிற்கூடம் கட்டிக்கொள்வதும் அதிசயம் ஒன்றும் கிடையாது. ஆனால் அப்படி தங்களுக்கென சொந்த வீடு, தொழிற்கூடம் கடை போன்றவற்றை கட்டுபவர்கள், இந்த ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்த பின்பு கட்டுவதால் மிகுதியான நன்மைகள் ஏற்படும். அத்தகைய சிறப்பான பரிகாரம் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் முதன் முதலாக உங்களுக்கென்று சொந்தமாக வீடு அல்லது கடை, தொழிற்கூடம் கட்டத் துவங்குவதற்கு முன்பாக உங்களின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று குலதெய்வத்திற்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபட வேண்டும். அதன் பிறகு திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த கோவில் அருகில் இருக்கின்ற கடலுக்கு சென்று 3 லிட்டர் அளவிற்கு கடல் நீரை ஒரு சுத்தமான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி புட்டியில் பிடித்துகொண்டு உங்கள் வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

- Advertisement -

கொண்டு வந்த அந்தக் கடல் நீரை உங்கள் வீட்டில் பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஒரு நல்ல நாளில் நீங்கள் புதிதாக வீடு கட்டுவதற்கு, அஸ்திவாரம் தோண்டி செங்கல் வைத்து கட்டுமானம் ஆரம்பிக்கும் போது குலதெய்வத்தையும், திருச்செந்தூர் முருகப் பெருமானையும் நினைத்து வழிபட்டு அஸ்திவார பள்ளத்தில் முதன் முதலில் கிழக்கு மேற்காக ஒரு செங்கலை வைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற கடல் தண்ணீரில் உங்களுக்கு தேவையான அளவு நீரை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சள் தண்ணீரை கிழக்கு – மேற்காக வைக்கப்பட்டிருக்கின்ற செங்கல் மீது நன்கு தெளிக்க வேண்டும். அதன் பின்னர் தேங்காய், பழம், பத்திகள் கொளுத்தி வைத்து உங்கள் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமானையும் மனதார வழிபட வேண்டும். பின்பு 3 சுமங்கலிப் பெண்களை அஸ்திவார பூஜை நடக்கும் இடத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பழம் கொடுக்கவேண்டும். (பொட்டலம் பாக்கு தவிர்த்து களிப்பாக்கு கொடுக்க வேண்டும்).

- Advertisement -

இதன் பிறகு அந்த மூன்று சுமங்கலி பெண்களின் கைகளால் தொட்டு செங்கலை எடுத்து தரச் செய்து, அந்த செங்கலை வைத்து முதன் முதலில் கட்டிடம் கட்டும் வேலையை தொடங்க வேண்டும். மேற்சொன்ன முறையில் உங்கள் சொந்த வீடு, தொழிற்சாலை போன்றவற்றை கட்டுவதால் எந்த தடங்கல்களும் இல்லாமல் வெகு சீக்கிரத்தில் கட்டி முடித்துவிடலாம்.

உங்களிடம் கடல்நீர் மீதம் இருக்கும் பட்சத்தில், அந்த நீரில் மஞ்சளை போட்டு கரைத்து, நன்கு கலக்கி அந்த மஞ்சள் தண்ணீரை கட்டிடம் கட்டவிருக்கின்ற இடங்கள் முழுவதும் தெளித்து விட வேண்டும். இப்படி செய்தால் அந்த கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை உண்டாகும். பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்ற எத்தகைய தீய சக்திகளும் அந்த வீட்டில் வசிப்பவர்களை பாதிக்காமல் காக்கும்.

- Advertisement -