நிலம் வைத்திருப்பவர்கள் வீடு கட்ட முடியவில்லை என்கிற கவலையில் உள்ளீர்களா? உடனடியாக வீடு கட்டி குடியேற செய்ய வேண்டிய பலன் தரும் எளிய பரிகாரம் என்ன?

murugan-soil-home
- Advertisement -

பலருக்கு நமக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லையே என்கிற கவலை இருக்கும் ஆனால் ஒரு சிலருக்கு நிலம் இருந்தும், வீடு கட்ட முடியவில்லை என்கிற கவலை ஆட்டிப் படைக்கும். இப்படி நிலம் இருந்தும், வீடு கட்ட முடியாமல் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய எளிய ஆன்மீக பரிகாரம் என்ன? வணங்க வேண்டிய தெய்வம் யார்? என்பது போன்ற பயனுள்ள ஆன்மிக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பலருடைய வாழ்நாள் லட்சியமாக இருப்பது நமக்கென சொந்த வீடு அமைய வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். இந்த சொந்த வீடு கட்டுவதில் பலருக்கும் எங்கு இடம் வாங்குவது? அதற்கான தொகையை எப்படி புரட்டுவது? என்கிற கவலை தான் அதிகம் இருக்கும் ஆனால் சிலருக்கு பரம்பரை சொத்தாகவோ அல்லது சொந்த முயற்சியில் வாங்கிய நிலமாகவோ கையில் இருக்கும், இருந்தும் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற முடியாமல் பல இடையூறுகளை சந்தித்து கொண்டு இருப்பார்கள்.

- Advertisement -

எவ்வளவு ஆசைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தாலும், அந்த நிலத்தில் வீடு கட்ட முடியக்கூடிய அளவிற்கு பணம் சேராது அல்லது அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு உரிய அடிப்படை வசதிகள் அந்த இடத்தில் இருக்காது. சிலர் காட்டுக்குள் இடத்தை வாங்கி வைத்திருப்பார்கள். அந்த காடானது எப்படியும் ஒரு சில காலங்களில் நல்ல வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கையில் அப்படியே விட்டு வைத்திருப்பார்கள் ஆனால் பல காலம் ஆகியும் அது அப்படியே தான் இருக்கும். அந்த இடத்தில் காசு இருந்தாலும், வீடு கட்ட முடியாமல் போய்விடும்.

இப்படி நிலம் வைத்திருப்பவர்களுக்கு வரக்கூடிய தடைகளை அகற்றி அந்த இடத்தில் நீங்கள் எல்லா வசதியோடும், கடன் பிரச்சினைகள் இல்லாமலும் வீடு கட்டி நிம்மதியாக குடியேற இந்த எளிய பரிகாரம் நிச்சயம் உபகாரமாக இருக்கும். பூமிகாரகனாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவானை செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அந்த பூமியில் வீடு கட்டுவதற்கான யோகத்தை சுக்கிர பகவான் கொடுப்பார். எனவே செவ்வாய் அன்று செவ்வாய் பகவானையும், வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானையும் வலம் வந்து வழிபடுங்கள். நவகிரக சந்நிதிக்கு சென்று அவர்களுக்கு உரிய நிறத்தில் வஸ்திரங்களை சாற்றி மனதார வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரமும், சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் சாற்றுவார்கள். மேலும் முருக வழிபாடு செய்வதும் சொந்த வீடு யோகத்தை கொடுக்கும் அற்புதமான வழிபாடு ஆகும். எனவே செவ்வாய் கிழமையில் முருகனை நினைத்து வழிபடுங்கள். ஒரு சிகப்பு நிற துணியில் நீங்கள் வாங்கிய இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு வெள்ளை நூலில் கட்டி பூஜை அறையில் கொண்டு போய் வையுங்கள்.

இந்த மூட்டைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு வழிபடும் போது இந்த சிகப்பு நிற மூட்டைக்கும் தூபம் காட்டி வழிபடுங்கள். பின்னர் நவகிரக சந்நிதிக்கு சென்று இது போல வஸ்திரம் சாற்றி வழிபட்டு வாருங்கள். மேலும் முருகனுக்கு கோவில்களில் அபிஷேகம் செய்யும் பொழுது அதற்கு உரிய பொருட்களை வாரம் ஒரு முறை வாங்கி கொடுத்து வாருங்கள். இது போல செய்து வந்தால் வாங்கிய நிலத்தில் நீங்களும் உங்களுக்கென ஒரு அழகிய சொந்த வீட்டை எந்த விதமான இடையூறுகளும், கடன் பிரச்சினைகளும் இல்லாமல் சுய வருமானத்தை கொண்டு கட்டி விடலாம்!

- Advertisement -