சொந்தமாக வீடு நிலம் அமைய வழிபாடு

murugan jathagam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்திலும் சொந்தமாக தனக்கென ஒரு நிலமோ வீடு இல்லை என தினம் தினம் மனப்போராட்டத்தில் இருப்பவர்கள் ஏராளமானோர். அப்படியானவர்கள் தங்களுடைய சொந்த வீட்டு கனவை நினைவாக்கிக் கொள்ள முருகப்பெருமான் வழிபாடு செய்வது நல்லது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும். எந்த நாளில் செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக வீடு நிலம் அமைய வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும். பொதுவாகவே சொந்தமாக வீடு நிலம் அமைய வேண்டும் எனில் அதற்கு செவ்வாய் பகவானின் அனுகிரகம் தேவை. அந்த கிரகத்திற்குரிய அதிபதி ஆனவர் முருகப்பெருமான். ஆகையால் தான் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமான் வழிபாட்டை செய்யும் போது நிலம் வீடு தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் தங்களுடைய சொந்த வீட்டு கனவை நினைவாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் முருகப்பெருமானை கிருத்திகை அல்லது திருவோண நட்சத்திர நாளில் வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் இந்த நாளில் நாம் பழனிக்கு சென்று அவரை வழிபட வேண்டும். முருகனின் வழிபாட்டில் இந்த நட்சத்திர நாள் தான் மிகவும் முக்கியம்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பழனி முருகரை இந்த இரண்டு நட்சத்திர நாளில் ராஜ அலங்காரத்தில் தரிசிக்கக் கூடிய யோகத்தை பெற்றால் நிச்சயம் வீடு நிலம் வாங்க வேண்டிய யோகம் வரும்.

- Advertisement -

அத்துடன் முருகப்பெருமானை நேரடியாக பழனி சென்று வழிபடாமல் அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன் குடியில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு பழனியில் அவரை தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு

ஆகையால் வீடு நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது வாங்க முடியாமல் தவிப்பவர்கள் இந்த வழிபாட்டினை செய்து பலன் அடையலாம். இந்த வழி[பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -