சொந்த வீடு அமைய தானம்

house warming rice
- Advertisement -

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு. ஏனெனில் வாடகை வீட்டில் தினம் தினம் வாழ்பவர்களை கேட்டால் இதற்கான ஏக்கம் நிச்சயமாக புரியும் ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ மாட்டோமோ என்ற ஏக்கத்துடனே தங்கள் வாழ்நாள் முழுவதும் கழித்துக் கொண்டு இருப்பார்கள்.

இப்படி வாடகை வீட்டில் துன்பப்படுபவர்களும் சொந்த வீட்டில் வாழக் கூடிய யோகத்தைப் பெற அருமையான ஒரு பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சொந்த வீட்டில் வாழ செய்ய வேண்டிய தானம்

தர்மம் தலைகாக்கும் என்றும், தான தர்மங்கள் செய்தால் நம்முடைய குடும்பம் தழைத் தோங்கும் என்பதும் காலம் தொட்டு நம் முன்னோர்கள் சொல்லி இந்த அளவும் நாம் செய்யும் ஒரு புனிதமான செயல். ஆகையால் தான் பல்வேறு பரிகாரங்களும் பூஜைகளும் இந்த தானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

இந்த பரிகாரமும் அது போல தான். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு சில தானங்களை செய்யும் பொழுது சொந்த வீடு வாங்கக் கூடிய யோகம் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அமையும். இதை கேட்கும் போதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் தாந்திரீக பரிகார முறையில் இது நல்ல பலனைப் பெற்ற பரிகாரமாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை திதி அல்லது பௌர்ணமி திதி இரண்டில் ஏதாவது ஒரு நாள் தான் செய்ய வேண்டும். அந்த திதி இருக்கும் நாளிலும் மதியம் 12 மணிக்குள் செய்ய வேண்டும் அதற்கு மேல் செய்யக்கூ டாது. அதே போல் இந்த தானத்தை கொடுக்க நீங்கள் உங்கள் உடன் பிறந்தவர்கள் உறவினர்கள் யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சொந்த வீட்டில் வாழ்பவராக இருக்க வேண்டும்.

இந்த தானத்திற்கு நீங்கள் வாங்க வேண்டிய ஒரே ஒரு பொருள் செம்பிலால் ஆன ஒரு பாத்திரம். அது சொம்பு டம்ளர் என உங்கள் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். அது முழுவதுமாக பச்சரிசியை நிரப்பிக் கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தை பச்சரிசியுடன் சொந்த வீட்டில் வாழும் உங்கள் உறவினருக்கு கொடுங்கள். ஆனால் நீங்கள் சொந்த வீட்டிற்கான பரிகாரமாக இதை செய்கிறீர்கள் என்று சொல்லக் கூடாது.

அதற்கேற்றார் போல் நீங்கள் எதையாவது சொல்லி அவர்களுக்கு இதை கொடுங்கள். இப்படி கொடுப்பதனால் சொந்த வீட்டில் வாழும் உங்கள் உறவினர்களுக்கு எந்தவித கேடும் வராது. மாறாக அவர்களுடைய பொருளாதார நிலையும் நல்ல முறையில் மேம்படும் என்பது தான் இந்த பரிகாரத்தின் சூட்சமம்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர தானம்
வாடகை வீட்டில் தினம் தினம் துன்பப்படுபவர்கள் சொந்த வீட்டிற்க்கான உங்கள் முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்யுங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -