வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேற வாடகை பணத்தை கொடுக்கும் முன் இப்படி செய்து விட்டு கொடுத்துப் பாருங்கள் அடுத்த வாடகை பணத்தை கொடுப்பதற்குள்ளாகவே சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களை தேடி வரும்.

house cash sevvai
- Advertisement -

காலம் முழுவதும் வாடகை வீட்டில் தான் வாழ வேண்டுமா? நமக்கெல்லாம் சொந்த வீடே அமையாதா என்ற ஏக்கம் இன்று பலரின் மனதில் உள்ளது. சொந்த வீட்டில் வாழ்வதே ஒரு தனி சுகம், நிம்மதி தான். பறவை இனத்துக்கெல்லாம் கூட தனக்கென தனியாக ஒரு கூடு இருக்கையில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென தனியாக ஒரு வீடு வேண்டும் என நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அப்படியான ஒரு யோகத்தை தரக் கூடிய எளிய பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சொந்த வீடு வாங்கக் கூடிய யோகம் வரை
சொந்த வீடு வேண்டும் என நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகர் வழிபாடு செய்வது நல்ல ஒரு பலனை தரும். ஏனெனில் வீடு மனை போன்ற யோகங்களை நமக்கு அமைத்து தருவது அங்காரகாரகன் அந்த கிரகத்திற்கான அதிபதி எனில் அவர் முருகப்பெருமான் ஆகையால் முருகப்பெருமானை எந்த கிழமைகளில் வணங்கி வரும் பொழுது சொந்த வீட்டிற்க்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு துவரம் பருப்பு மட்டும் தான் தேவை. இதற்கென நீங்கள் தனியாக வாங்க வேண்டாம். நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பு போதும். வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் மாதா மாதம் வாடகை தர வேண்டும். அந்த வாடகை பணத்தை தான் நாம் இந்த துவரம் பருப்பில் வைத்து கொடுக்க வேண்டும்.

வாடகை பணத்தை துவரம் பருப்பில் வைத்துக் கொடுப்பதால் சொந்த வீடு வாங்கும் யோகம் வருமா என்று கேள்வி எழலாம். இந்த அங்கார காரகனுக்குரிய தானியமாக பார்க்கப்படுவது துவரை. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தானியம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்த கிரகத்திற்கான தானியமான துவரையில் நீங்கள் மாதம் கொடுக்கும் வாடகை பணத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பணத்தை நீங்கள் திங்கட்கிழமை அன்று ஒரு கவரில் நீங்கள் எவ்வளவு வாடகை தர வேண்டுமோ அதை போட்டு துவரம் பருப்பு டப்பாவில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரை வரும் நேரத்தில் இந்த வாடகை பணத்தை உங்கள் வீட்டு ஹவுஸ் ஓனரிடம் தந்து விடுங்கள். அப்படி உங்களுக்கு ஹேரை பார்த்து கொடுக்க முடியவில்லை எனில் காலை முதல் மதியம் வரை இருக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை கொடுக்கலாம். இந்த ஓரை காலத்தை தெரிந்து கொள்ள நம் வீட்டில் இருக்கும் தினசரி காலண்டரை பார்த்தாலே தெரியும்.

இதையும் படிக்கலாமே: பணம் பல வழிகளில் பறந்தோடு உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்க வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் இந்த மூன்று வழிபாட்டையும் செய்து விடுங்கள் போதும். வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமே வராது.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய சொந்த வீடு கனவுகள் நினைவாக கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்காக எந்த ஒரு முயற்சி தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியின் தான் முடியும் அது மட்டும் இன்றி அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இது தான் இந்த பரிகாரத்தில் காண முக்கியமான அம்சமே. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து சொந்த வீட்டில் வாழும் யோகத்தை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -