சொந்த வீடு அமைய வழிபாடு

dheepam sivan
- Advertisement -

இன்று வீடு இருக்கும் பலருக்கும் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத அளவிற்கு பிரச்சனைகள் இருக்கிறது. பலருக்கும் சொந்தமாக வீடு இல்லையே என்ற பிரச்சனை இருக்கிறது. இன்னும் சிலருக்கு சொந்தமாக இடம் இருக்கும் ஆனால் அந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமலும், கட்டிய வீட்டை முடிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்.

அதிலும் வறுமை நிலைமையில் இருந்து கொண்டு வாடகை வீட்டில் துன்பப்படுபவர்கள் சொந்த வாழ எத்தனை ஆசைப்படுவார்கள் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படி நிலம் வீடு தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான எளிய தீர்வாக உள்ள ஒரு தீப வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்

- Advertisement -

கிரக தோஷம் நிலம் தொடர்பான பிரச்சனை தீர வாஸ்து நாள் வழிபாடு

பொதுவாக நிலம் வீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்குமான வழிபாடு, பரிகாரம் அனைத்தையும் செவ்வாய்க்கிழமையில் செய்வோம். ஏனெனில் இதற்கென அனுகிரகத்தை தரக்கூடியவர் செவ்வாய் பகவான் அவருக்கு அதிபதியானவர் முருகப்பெருமான். இவர்களுக்கு உகந்த நாள் இந்த செவ்வாய்க்கிழமை.

இது மட்டும் இன்றி வாஸ்து நாள் இது தொடர்பான அனைத்து வழிபாடுகளுக்கும் பரிகாரங்களுக்கும் மிகவும் உகந்து. வாஸ்து பகவானே பூமி காரகன் தான். ஆகையால் தான் வீடு நிலம் தொடர்பான காரியத்தை தொடங்கும் போதும் வாஸ்து பூஜை செய்யாமல் செய்வதில்லை. நாளைய தினம் இவை இரண்டும் ஒன்று சேர வந்திருப்பது மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய நாள்.

- Advertisement -

இத்தகைய அற்புதமான நாளில் நாம் ஏற்றக் கூடிய இந்த தீபம் நம்முடைய அனைத்து நிலம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தீபத்தை நாளை காலை 10:30 மணியிலிருந்து 11.03 மணியிலான வாஸ்து நேரத்தில் ஏற்ற வேண்டும். அது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீப வழிபாட்டிற்கு உங்கள் வீட்டில் ஸ்படிக லிங்கம் அல்லது வேறு ஏதாவது லிங்கம் இருந்தால் மிகவும் நல்லது. அது இல்லை என்றால் சிவபெருமானின் திருவுருவப்படம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

மேலே குறிப்பிட்ட வாஸ்து நேரத்தில் பூஜையறையில் பச்சரிசி மாவால் சிறிய கோலம் போடுங்கள். அதன் மேல் நான்கு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத் திரி போடுங்கள். இந்த நான்கு விளக்கும் நான்கு திசையை பார்த்து எரிய வேண்டும். நெய்வேதியமாக ஏதேனும் ஒரு இனிப்பை செய்து வைத்து விடுங்கள். இந்த விளக்குகளை ஏற்றி வைத்து விட்டு அதன் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் அமரும் திசை கிழக்கு அல்லது வடக்காக இருக்க வேண்டும்.

இப்போது தீபத்தை பார்த்தவாறு சிவபெருமானின் மனதில் நினைத்துக் கொண்டு ஓம் சிவாய நம என்ற இந்த நாமத்தை 108 முறை மனதார சொல்லுங்கள். நிலம் வீடு தொடர்பான பிரச்சனைகள் கிரக கோளாறுகள் போன்றவை தீர வேண்டும் என்று சிவபெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு முடிந்தவுடன் நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து உண்ணுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி சேராத இருக்க

இந்த ஒரு வழிபாட்டை நாளைய தினம் தவறாமல் செய்பவர்களுக்கு சொந்த வீட்டில் வாழக் கூடிய கனவு நிச்சயம் நினைவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -