செவ்வாய்க்கிழமை இந்த சாதத்தை அன்னதானம் செய்தால், நீங்க சொந்த வீடு வாங்குவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

house
- Advertisement -

சொந்தமாக வீடு வாங்க வேண்டும். இது நிறைய பேரின் கனவாகவே முடிந்து விடுகிறது. வாழ்நாளில் சில பேரால் சொந்த வீட்டில் ஒரு நாள் கூட வாழ முடியாமலும் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பூர்வீக சொத்து இல்லாமல், பூர்வீக இடமோ நிலமோ, இல்லாமல் வீடு கட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வீடு கட்ட வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். இருப்பினும் எல்லோராலும் சொந்த வீடு கட்டிவிட முடியுமா என்று கேட்டால் அது நிச்சயமாக கேள்விக்குறியான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த முருகப்பெருமானின் கடைக்கண் பார்வையும், செவ்வாய் கிரகத்தின் அனுகிரகமும் ஒரு சேர நமக்கு கிடைத்தால் சொந்த வீட்டை சுலபமாக கட்டி முடித்து விடலாம். அதற்காக எத்தனையோ பரிகாரங்கள் சாஸ்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

அதிலிருந்து ஒரு சின்ன பரிகாரத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். பூமி காரகன் அங்காரகன், செவ்வாய் பகவான். செவ்வாய்க்கிழமை தோறும் நவகிரகங்களில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி மிளகு பொங்கல்(வெண்பொங்கல்) வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அரளி பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையை மனதார செவ்வாய் பகவானிடம் வையுங்கள். இந்த பூஜையை முடித்துவிட்டு நிவேதனத்தை அந்த  பொங்கலை அன்னதானம் செய்ய வேண்டும். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் இந்த பிரசாதத்தை கொடுக்கலாம். அப்படி இல்லையா கோவிலுக்கு வெளியில் தர்மம் கேட்டு சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த சர்க்கரை பொங்கலை சாப்பிடவும் கொடுக்கலாம்.

மேலே சொன்ன விஷயங்கள் ஆன்மீக ரீதியாக செய்யப்படும் பரிகாரம். எனக்கு சாமியின் மீது நம்பிக்கையில்லை. கிரகங்களின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பவர்கள் வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் மிளகு பொங்கலை நீங்கள் செய்தும் அன்னதானம் செய்யலாம். அப்படி இல்லையா கடையில் நான்கு பொட்டலம் வாங்கி 4 ஏழைகளுக்கு அன்னதானமாக கொடுக்கலாம். இதுவும் பலன் தரக்கூடிய பரிகாரம் தான்.

- Advertisement -

எல்லா விஷயங்களிலும் ஒரு சூட்சமத்தை நம் முன்னோர்கள் மறைத்து வைத்து தான் சொல்லி இருக்கின்றார்கள். நல்லது செய்ய வேண்டும் அதை சுவாமி பெயரை சொல்லி செய்தாலும் சரி, அல்லது மனதார அடுத்தவர்களுக்கு உதவி செய்தாலும் சரி, நீங்கள் செய்யக்கூடிய தர்மம் உங்கள் தலையை காக்கும். நிச்சயம் அதில் எந்த ஒரு மாறுதலும் கிடையாது.

சில பேருக்கு வீடு கட்ட கையில் 1 பைசா கூட இருக்காது. கடினமாக உழைத்து சம்பாதித்து கூடிய சீக்கிரத்தில் முன்னேறி வீட்டை கட்டி விடுவார்கள். இவர்களுக்கு அந்த இடத்தில் அதிர்ஷ்டம் அடித்தது என்று தான் எல்லோரும் சொல்லுவோம். ஆனால் அவர்கள் பட்ட கஷ்டம், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதிர்ஷ்டத்தால் எல்லோராலும் உயர்ந்து விட முடியாது. அதிர்ஷ்டத்தை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் கடின உழைப்பை மூலதனமாக போட வேண்டும் என்ற இந்த தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -