இந்த ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி வைத்தால் போதும். ஒரு வருடத்தில் உங்களுக்கு சொந்த வீடு கிடைப்பது உறுதி.

house
- Advertisement -

நம் கையில் எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் சரி, நாம் குடி இருப்பதற்காக, நமக்கு என்று ஒரு வீடு இல்லை என்றால் அத்தனை சொத்து சுகங்கள் இருந்தும் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. லட்சம் லட்சமாக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடியிருப்பதற்கு நமக்கு என்னதான் வசதி வாய்ப்பு இருக்கட்டும். நம் சொந்த வீட்டில் இருக்கக்கூடிய சுகத்தை அந்த வாடகை வீடு கொடுத்து விடுமா என்ன? வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எல்லோர் மனதிலும் நிச்சயமாக நமக்கும் ஒரு சொந்த வீடு இல்லையே என்ற வலி இருக்கத்தான் செய்யும். இதற்காக வாடகை வீட்டில் இருப்பவர்கள் மன நிம்மதியோடு இல்லை என்று சொல்லவில்லை. நமக்கும் ஒரு சொந்த வீடு இல்லையே என்று ஆழ்மனதில் இருக்கும் ஒரு வருத்தம்.

vamanan

சொந்த வீடு கட்டுவதற்கு ஆன்மீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த பரிகாரத்தை செய்தும் எனக்கு பலன் இல்லை. சொந்த வீடு கட்டும் யோகம் வரவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு வருடம் இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பார்த்து விடுங்கள். நிச்சயமாக நிரந்தரமாக உங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சக்தி வாய்ந்த அந்த ஆன்மீக ரீதியான பரிகாரம் என்ன நாமும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இந்த தீபத்தை மாதம்தோறும் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தன்று உங்கள் வீட்டின், அக்னி திசையில் ஏற்ற வேண்டும். ஒரு சிறிய மண் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வாமனனை மனதார நினைத்து மனதார சொந்த வீடு வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த விளக்குப் பக்கத்தில் ஒரு டம்ளரில் பால் பாயாசத்தை நிவேதனமாக வைக்க வேண்டும்.

deepam

மாதந்தோறும் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை மனதார நினைத்து, பெருமாளின் வாமன அவதாரத்தை நினைத்து இந்த தீபத்தை நம்பிக்கையோடு உங்கள் வீட்டில் ஏற்றினால் ஒரு வருடத்திற்குள் நிச்சயமாக சொந்த வீடு கட்டும் யோகம், சொந்த வீடு வாங்கும் யோகம், சொந்த நிலம் வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

வீட்டில் அக்னி திசையை தான் மண்ணுக்கு உரிய திசையாக சொல்லி வைத்துள்ளார்கள். அதாவது அங்காரகனுக்கு உரிய திசை இந்த அக்கினி திசை. வீட்டின் தென்மேற்கு மூலையே அக்னி திசை ஆகும். விஷ்ணு பகவான் எடுத்த ஐந்தாவது அவதாரம் தான் இந்த வாமன அவதாரம். வாமன அவதாரத்தை எடுத்த எம்பெருமான் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை கேட்ட வரலாற்றுக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே.

vishnu-laxmi

வாமனன் முதலடியை வானிலும், இரண்டாவது அடியை பூமியிலும் வைத்து, தன்னுடைய மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையின் மீது வைத்து, சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி நிலத்தைப் பெறுவதற்காக விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம் தான் இந்த வாமன அவதாரம். பெரும்பாலும் இந்த வரலாற்று கதை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

house

இதனடிப்படையில் தான் நமக்கு சொந்தமாக வீடு நிலம் தேவை என்றால் அதற்கான பிரார்த்தனையை விஷ்ணு பகவானின் அவதாரமான வாமனனிடம் வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கான உரிமையை நமக்கான நிலத்தினை பெற்றுத் தரக்கூடிய சக்தி கொண்ட தெய்வம் இந்த வாமன அவதாரம்.

veedu

நீங்களும் நம்பிக்கையோடு உங்களுடைய வீட்டில் ஒரு வருடம் தொடர்ந்து மாதம்தோறும் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தில் வாமனனை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வந்தால், ஒரு வருடத்தில் உங்களுக்கு வீடு கிடைப்பது உறுதி என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை நிச்சயமாக பெறமுடியும் என்ற கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -