வீடு கட்ட வேண்டும் என்பது தான் உங்கள் கனவா? உடனடியாக சொந்த வீடு கட்டி குடியேற பூஜை அறையில் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன?

murugan-soil-home
- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலருடைய கனவாக எப்பொழுதும் இருந்து வருகிறது. அதிலும் நடுத்தர வர்கத்தினர் பெரும்பாலும் இதற்காக நிறையவே போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். வாடகை வீட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து போய் விட மாட்டோமா? என்று வேண்டாத கடவுளே இருக்காது. சொந்த வீடு கட்டி குடியேறும் யோகம் வருவதற்கு நாம் பூஜை அறையில் எதை வைத்து வழிபட வேண்டும்? என்கிற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சொந்த வீடு கனவு நிறைவேற வேண்டும் என்றால் முதலில் செவ்வாய் பகவான் உடைய அருள் வேண்டும். அது மட்டும் அல்லாமல் முருகப் பெருமானை வழிபட்டு வருபவர்களுக்கு விரைவாகவே வீடு கட்டும் கனவு நிறைவேறப்படுவதாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்து வந்தாலும் சொந்த வீடு கனவு என்பது எளிதாக நனவாகும்.

- Advertisement -

குலதெய்வ அருளும், ஜாதகத்தில் வலுவான அமைப்பும் இருக்கப் பெற்றால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீங்கள் சொந்த வீட்டை கட்டி முடித்து விடலாம். உங்களுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் முதலில் பூஜை அறையில் இருந்து இதை துவங்குங்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செவ்வாய் பகவானுக்கு உரிய கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டு வாருங்கள். கருங்காலி கட்டை என்பது ரொம்பவே விசேஷமான புனித தன்மையுள்ள தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு மரமாக இருக்கிறது. இந்த மரத்திலிருந்து செய்யப்பட்ட உருளையை வைத்து தான் ஜோதிடம் அக்காலங்களில் கணிக்கப்பட்ட வந்தது. கைரேகை ஜோதிடத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த கருங்காலி கட்டையினை நம் வீட்டில் பூஜை அறையில் வைத்து இருந்தால் குலதெய்வ அருள் கிடைப்பதாக நம்பிக்கை நிலவப்படுகிறது.

கருங்காலி இருக்கும் இடத்தில் அவ்வீட்டின் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு எனவே குலதெய்வம் தெரியாதவர்களுக்கு கூட அவை தெரிய வர வேண்டும் என்றால் கருங்காலி கட்டையை வீட்டின் பூஜையறையில் வைத்து முறையாக வழிபட்டு வர வேண்டும். கருங்காலியினால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை செய்து வர முருகப்பெருமானுடைய அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். இதனால் சொந்த வீட்டை ரொம்பவே எளிதாகவும், விரைவாகவும் கட்டி முடிக்கலாம்.

- Advertisement -

சொந்த வீட்டிற்கு அதிபதியாக விளங்கக்கூடிய இவர்கள் அருள் இருந்தால் தடையில்லாமல் எல்லா காரியங்களும் வெற்றியாக நடைபெறும் என்கிற நம்பிக்கை உண்டு. இதனால் தான் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்ல சொல்வது உண்டு. முருகனுடைய வேலினை தரிசித்து மற்றும் அதனை வணங்கி வருபவர்களுக்கு எளிதாக சொந்த வீடு கட்டக்கூடிய வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே:
நிலை வாசலில் இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே செய்யாதிங்க. வீட்டிற்குள் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் இதுதான்.

உங்களை சுற்றியுள்ள தடைகள் படிப்படியாக விலகவும், கண் திருஷ்டிகள் நீங்கவும், மனோதிடம் உண்டாகவும், நல்ல படிப்பு, கலைகளில் சிறந்து விளங்கவும் கருங்காலி கட்டையை வீட்டில் வைத்து குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வர வேண்டும். குலதெய்வத்திற்கு உரிய எல்லா விதமான பூஜை முறைகளையும் இந்த கருங்காலி கட்டைக்கு நீங்கள் செய்யலாம். உங்கள் வீட்டு முறைப்படி நீங்கள் கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டால் உங்களுக்கு விரைவாக எல்லா விதமான நன்மைகளும், யோகங்களும் நடப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -