சொந்த வீடு, நிலம் வாங்க கூடிய யோகம் தானாக உங்களைத் தேடி வரும். 6 வாரம் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்தால்.

grahapravesam
- Advertisement -

சொந்தமாக வீடு நிலம் இல்லாதவர்களுக்கு இயல்பாக மனதில் இருக்கக்கூடிய ஒரு ஆசை தான் இது. நமக்கும் ஒரு சின்ன நிலம் சொந்தமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு குடிசை வீடாக இருந்தாலும் அது நம் சொந்த வீடாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். இந்த ஆசை நிறைவேற வேண்டுமென்றால் முதலில் நாம் விடா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தினமும் மனதில் வீடு கட்டவேண்டும். சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பதை ஆழ் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நினைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வீடு கட்டுவதற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய முயற்சிகளை தொடங்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எடுக்கக்கூடிய அந்த முயற்சி உங்கள் கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் நிறைய பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதுதான் நம்பிக்கை. நம்பிக்கை என்றுமே தோற்றுப் போனது கிடையாது. பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி உண்டு என்ற நம்பிக்கையில் நாமும் பரிகாரத்தை பார்த்து விடுவோமா.

- Advertisement -

வீடு வாங்க வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் செய்ய வேண்டிய ஆன்மீக ரீதியான பரிகாரம். இதற்கு முதலில் சிறிய திரிசூலம் வாங்கிக் கொள்ள வேண்டும். அம்மன் கைகளில் இருக்கும் அல்லவா. சிறிய அளவில் எந்த உலோகத்தில் இருந்தாலும் சரி, அதை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். எப்போதும்போல வெள்ளிக்கிழமை பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கை பிடி அளவு பச்சரிசி, ஒரு ஸ்பூன் அளவு தூள் வெல்லத்தை அல்லது நாட்டுச் சர்க்கரையை அந்த பச்சரிசியில் போட்டு கலந்து விடுங்கள். இந்த பச்சரிசியில் வாங்கி வைத்திருக்கும் சூலத்தை சொருகி நிற்க வைத்து விட வேண்டும். சூலத்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து, ஒரு பூவை வைத்துவிடுங்கள்.

- Advertisement -

குலதெய்வத்தை முதலில் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த சூலத்திற்கு முன்பு அமர்ந்து மனதார உங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை ஐந்து நிமிடத்தில் இருந்து பத்து நிமிடம் வரை ஆழ் மனதில் வைக்கவேண்டும். அதன்பின்பு தீப தூப ஆராதனை காட்டி எப்போதும்போல பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். 6 வார வெள்ளிக்கிழமை இந்த பூஜை செய்ய வேண்டும். (பெண்களுக்கு இடையே பூஜை செய்ய கூடாத வாரம் வந்தால் அந்த வாரத்தை தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தை கணக்கு வைத்துக் கொள்ளலாம்).

ஆனால் ஒரு வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, அடுத்த நாள் சனிக்கிழமை அன்று சூலத்தை அந்த பச்சரிசியில் இருந்து எடுத்துவிட்டு, பச்சரிசியையும் வெல்லத்தையும் கலந்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா, அதை அப்படியே ஒரு ஓரமாக எறும்புகள் சாப்பிட போட்டுவிட வேண்டும். சூலத்தை பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து அதில் சூலத்தை சொருகி வைத்து பூஜையை செய்ய வேண்டும். இவ்வாறு 6 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வீடு கட்டுவதில், சொத்து வாங்குவதில் இருக்கக்கூடிய தடை அகலும் என்று சொல்லப்பட்டுள்ளது.

6 வார பூஜை முடிந்ததும் அந்த சிறிய சூலத்தை அம்மன் கோவில் உண்டியலில் சேர்த்து விடலாம். 6 வாரம் முடிந்ததும் கட்டாயமாக சொத்து வாங்கி விடலாமா என்ற கேள்வி இப்போது உங்களுடைய மனதில் எழும். நேரம் காலம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. நம்பிக்கையோடு செய்யுங்கள். கையில் பணமே இல்லை என்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர ஆரம்பிக்கும். கையில் பணம் உள்ளது ஆனால் நல்ல இடம் அமையவில்லை என்பவர்களுக்கு நல்ல இடத்தை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.

எல்லாவற்றிற்கும் கொஞ்சம் நேரம் காலம் எடுக்கத்தான் செய்யும். ஆகவே பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளும் போது முயற்சிகளில் ஏற்படக்கூடிய தடை நீங்கி சீக்கிரம் நீங்கள் சொத்து வாங்கும் யோகத்தை அடைவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -