சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் வெற்றி பெற, இந்த பூஜை செய்தாலே போதும். கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் கிடைக்கும்.

gragapravesam
- Advertisement -

சில பேருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் சில பேர் அதையே ஒரு பெரிய லட்சியமாக, குறிக்கோளாக வைத்திருப்பார்கள். விடாமல் போராடி எதையாவது செய்து, சொந்த வீட்டில் குடி போக வேண்டும் என்று வெறித்தனமோடு காசு சேர்க்க போராடுவார்கள். அவ்வளவு போராடியும் வீடு கட்டுவதற்கோ, நிலம் வாங்குவதற்கோ வாய்ப்புகள் வராது. நீங்கள் வீடு கட்ட எடுக்கக்கூடிய முயற்சிகளோடு சேர்த்து இந்த ஒரு பூஜையும் செய்யுங்கள். நிச்சயமாக அந்த ஆண்டவன் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகத்தை கொடுத்து விடுவான். உங்கள் கனவு நினைவாகும். வாங்க நேரத்தை கடத்தாமல் சொந்த வீடு வாங்க ஆன்மீகம் சொல்லும் அந்த எளிய பரிகாரத்தை நாமும் தெரிந்து கொள்வோம்.

சொந்த வீடு வாங்க நிலை வாசல் பூஜை:
செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்ய வேண்டும்‌. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்கள் நிலை வாசல் சட்டத்தை நன்றாக துடைத்து, நிலை வாசலுக்கு கீழ் பக்கம் இருக்கும் சட்டத்தில், இரண்டு பக்கத்திலும், நன்றாக மஞ்சளை பூசி விட்டு குங்குமப்பொட்டு வைத்து வாசல் படியில் அரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு நிலை வாசலுக்கு இரண்டு பக்கத்திலும் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த வாசலுக்கு ஊதுவத்தை காண்பித்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்ய வேண்டும். சிறிய அளவில் நாம் செய்யும் இந்த நிலை வாசல் பூஜை உங்களுக்கு சொந்தமாக ஒரு நிலை வாசலை கொடுக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இந்த பூஜையை செய்தால் நிச்சயம் சொந்த வீடு அமையும் யோகம் வந்துவிடும். சொந்த வீட்டில் இருப்பவர்கள் இந்த பூஜையை செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். மேலும் மேலும் சொத்துகாகள் பெருகும்.

நிலைவாசல் சட்டத்திற்கு மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து, சிவப்பு நிறத்தில் பெயிண்டில் பொட்டு வைக்க கூடாது. இது ஒரு போதும் வீட்டிற்கு நல்லது அல்ல. இதை செய்தால் நிச்சயம் லட்சுமி கடாட்சம் கிடைக்காது. சரி அது போகட்டும்.

- Advertisement -

இது தவிர செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவில் குருக்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். கோவிலுக்கும் ஒரு நிலை வாசல் படி இருக்கும். நிலை வாசல் கதவு இருக்கும். சில கோவில்களில் பெரிய வாசல் படி இருக்கும். சில கோவிலில் சின்ன வாசல் படி இருக்கும். எப்படி இருந்தாலும் சரி, அந்த வாசல் படியை நன்றாக கழுவி மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து, கோவில் வாசலில் அழகான கோலம் போட்டு, அலங்காரம் செய்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கோவிலில் நிலை வாசல் பூஜையை உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் செய்யலாம்.

அதேபோல எந்த கோவிலுக்கு நீங்கள் சென்றாலும், கோவிலுக்குள் நுழையும் போது பெரிய வாசல் படி இருக்கும். அதுதான் கோவிலின் நுழைவாயிலாக இருக்கும். அந்த படியை மிதித்து விட்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது. அந்த படியை தாண்டி தான் செல்ல வேண்டும். உங்கள் வீட்டு நிலை வாசல் படியையும் நீங்கள் மிதிக்கக்கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த பங்குனி உத்திர திருநாளில் இதை செய்தால் போதும் விரைவில் திருமணம் கை கூடுவதுடன், மனதிற்கு பிடித்த நிறைவான வாழ்க்கைத் துணை நிச்சயம் அமையும்.

இப்படி மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களை வந்து சேரும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -