சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களைத் தேடி வரும். இந்த ஒரு பொருளை உங்கள் கையால் தானமாக குடுங்க போதும்.

house
- Advertisement -

காக்கை குருவி கூட, தான் வாழ வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டிக் கொள்ளும். அப்படி இருக்கும் போது மனிதர்களாகிய நமக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்காதா. நிச்சயம் இருக்கும். காக்கை குருவிகள் கூட கஷ்டப்படாமல் சுலபமாக தன்னுடைய வீட்டை அமைத்துக் கொள்ள முடியாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய குச்சிகளை நார்களை சேகரித்துத்தான், அந்த வீட்டை கட்டி முடிக்கிறது. அதே போல் தான் நாமும் சிரமப்பட்டு நமக்கென்று தனி வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். சிரமப்படாமல் வாழ்வில் எதுவுமே கிடைக்காது. சிரமப்படாமல் கிடைப்பது நிலைக்காது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

நம்மில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் தேவை என்பது. செவ்வாய் பகவானுக்கு உரிய கடவுள் என்றால் முருகர். செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள், சென்னைக்கு அருகில் இருப்பவர்கள் சிறுவாபுரி முருகன் வழிபாட்டை தொடர்ந்து நம்பிக்கையோடு ஆறு செவ்வாய் கிழமைகள் மேற்கொண்டால் சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் வரும். இது நிறைய பேர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை. முதல் பரிகாரமாக இதை செய்து கொள்ளுங்கள். எல்லோராலும் அந்த கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலை இருக்காது. செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி முருகரை நினைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வீட்டில் முருகப்பெருமானை நினைத்து 6 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, செவ்வரளி பூக்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வீடு வாங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும். தொடர்ந்து ஆறு வாரங்கள் இந்த பரிகார பூஜையை வீட்டில் செய்வது நல்லது.

செவ்வாய் பகவான் என்றால் அதற்கு உரிய நிறம் சிவப்பு ஆரஞ்சு பிங்க் இப்படி எதை வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரம் பருப்பு. செவ்வாய்க்கிழமை அன்று துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். துவரம் பருப்பில் கூட இரண்டு வகை உண்டு. சாதாரணமாக நாம் சாம்பாருக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பு. இன்னொன்று மைசூர் பருப்பு என்று சொல்லுவார்கள். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அல்லவா அந்த துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுங்கள்.

- Advertisement -

அந்த துவரம் பருப்பை ஆறு கிலோ என்ற கணக்கில் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு. ஆறுமுகனுக்கு ஆறு விளக்கு, ஆறு என்ற எண் சிறப்பு அல்லவா. அதனால் தான் இந்த கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமங்களுக்கு இப்படி இந்த துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுக்கலாம். ரொம்பவும் கஷ்டப்படக் கூடிய குடும்பத்திற்கு இந்த துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்த தானத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். ஆறு செவ்வாய் கிழமைகள் இந்த தானத்தை கொடுப்பது சிறப்பு. (பணம் கொடுத்து ஆறு கிலோ வாங்கிக்கோங்க. பிரித்து பிரித்து இரண்டு மூன்று நபர்களுக்கு தானம் கொடுத்தாலும் தவறு கிடையாது.)

மேலே சொன்ன பரிகாரத்தை செய்பவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைத்து விடுமா என்று கேட்டால் நிச்சயமாக கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அதற்கான நேரம் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

சிலருக்கு ஆறு வாரம் பரிகாரத்தை செய்த உடனேயே கை மேல் பலன் கிடைக்கும். சில பேருக்கு ஆறு வருடம் கழித்தும் பலன் கிடைக்கும். அது அவரவருடைய சொந்த கர்ம வினைகளை பொறுத்தது. பரிகாரத்தை செய்வோம். முயற்சிகளை மேற்கொள்வோம். கடவுள் நிச்சயம் கண்களை திறப்பான் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -