இந்த 1 செங்கலை எப்படியாவது பணம் கொடுத்து வாங்கி விட்டால் போதும். அதை வைத்து சூப்பராக சொந்த வீடு கட்டி விடலாம்.

sengal
- Advertisement -

ஒரு செங்கல் வாங்கக் கூட வழியில்லை, இதில் நான் எங்கிருந்து சொந்த வீடு கட்ட போகிறேன். இப்படி பேச்சு வழக்கில் நாம் சொல்லுவது உண்டு. ஆனால் ஒரு செங்கல்லை நீங்கள் காசு கொடுத்து வாங்கி விட்டால், நிச்சயம் சொந்த வீடு வாங்க முடியும். செங்கல்லை வைத்து தான் உறுதியான வீட்டை கட்டுகின்றோம். அதேபோல தான் ஒரு செங்கல்லை வாங்கி விட்டீர்கள் என்றால், அதை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தின் மூலம் உறுதியாக நீங்கள் சொந்த வீடு கட்டி விடுவீர்கள்.

அந்த அளவுக்கு நம்பிக்கை வாய்ந்த ஒரு சூட்சம பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் இருக்கா. அது போதும் இந்த பரிகாரத்தை செய்தால் பணம் தானாக தேடி வரும்.

- Advertisement -

சொந்த வீடு வாங்க ஒரே 1 செங்கல் பரிகாரம்:
செங்கல் சூலையிலோ அல்லது கடையிலிருந்து ஒரு செங்கல்லை தரமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த செங்கல் உடைந்து போகக்கூடாது. வாங்கி வந்த செங்கல்லை, நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு, எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டுக்கு மேலே அரச இலை ஒன்று வைத்துவிட்டு, இந்த செங்கல்லை அந்த இலையின் மேல் நிற்க வைத்து விட்டு, செங்கலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டை நான்கு பக்கமும் வைத்து அதற்கு ஒரு பூ வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த செங்கலுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மண் அகல் விளக்கு ஏற்றி வைத்தால் கூட போதும். நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த முருகப்பெருமானையும் குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு ஏழு மணிக்கு முன்பாக இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சொந்த வீடு வாங்கும் கனவு நினைவாக வழி காட்ட வேண்டும் என்று இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல் வையுங்கள்.

- Advertisement -

இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் இந்த செங்கலை வைத்து நான் வீடு கட்டியே ஆவேன், என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். 48 நாட்கள் தொடர்ந்து இப்படி பூஜையே செய்துவிட்டு, 48 வது நாள் இந்த செங்கல் எடுத்து பத்திரப்படுத்தி எங்கேயாவது பரண் மேலே வைத்து விடுங்கள். வீடு கட்ட பணம் சேர்க்க நிலம் வாங்க என்ன முயற்சிகள் தேவையோ, அதை நீங்கள் எடுக்கலாம். நிச்சயமாக வீடு கட்டுவதில் நிலம் வாங்குவதில் இருக்கும் அத்தனை தடைகளும் நீங்கி நீங்கள் சொந்த வீடு வாங்க கூடிய யோகம் உங்களுக்கு கைகூலி வரும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த ஆசைகள் நிறைவேற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம் என்ன தெரியுமா? இந்த தீபம் ஏற்றினால் தீராத ஆசைகள் தீரும்.

உங்களிடம் ஒரு ரூபாய் பணம் இருக்காது. பரம்பரை சொத்து இருக்காது. பின்பு எப்படி வீடு கட்டுவீர்கள். ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பை அந்த ஆண்டவன் ஏற்படுத்திக் கொடுப்பான். நம்பிக்கை தாங்க முக்கியம். நம்பியவர்களை அந்த ஆண்டவன் நிச்சயம் கைவிடமாட்டான். இந்த பரிகாரத்தை செய்துதான் பாருங்களேன். உடனடியாக நீங்கள் வீடு கட்ட முடியவில்லை என்றாலும், உங்களுடைய இறுதி நாட்கள் உங்களுடைய சொந்த வீட்டில் தான் இருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -