சொந்த வீடு நிலம் வாங்க கூடிய யோகத்தை பெற செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

veedu1
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலம் வீடு இருக்க வாங்க என்ற ஆசை இருக்கும். இந்த ஆசை நியாயமானது தான். அதிலும் வாடகை வீட்டிலே காலத்தை கழிப்பவர்கள் ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ மாட்டோமா என்ற ஏக்கத்துடனே தினம் தினம் வாழ்வார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு எளிய பரிகாரத்தை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் சிலருக்கு சொந்தமாக நிலம் வீடு அனைத்தும் இருக்கும். ஆனால் சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாது. தன்னுடைய வீட்டில் தான் வாழாமல் வேறு இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அல்லது வீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இப்படியானவர்களும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அவை சரியாக கூடும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சொந்த வீடு நிலம் தொடர்பான பிரச்சனை தீர பரிகாரம்

வீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் வணங்க வேண்டியது அங்காரகாரங்கனையும் அதற்கான கடவுளான முருகப்பெருமானையும் தான். இவர்களுக்கான ஒரு நாளெனில் அது செவ்வாய்க்கிழமை தான்.

ஆகையால் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் வீட்டில் செவ்வாய் ஹோரையில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு முழு துவரையை எடுத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பிலே தோல் நீக்காமல் முழுதாக இருக்கும் அந்த பருப்பு கிடைத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அது கிடைக்காத பட்சத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் துவரை அல்லது மைசூர் பருப்பு பயன்படுத்தலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை காலையில் முருக பெருமான் படத்திற்கு முன்பாக தட்டில் துவரையை பரப்பிய பிறகு அதன் நடுவில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். இத்துடன் முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் மாலை சூட்டி விடுங்கள்.

இப்போது இந்த படத்திற்கு முன்பாக அமர்ந்து உங்கள் வீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபம் அரை மணி நேரம் வரை எரிய வேண்டியது அவசியம். இதைத் தொடர்ந்து ஆறு வாருங்கள் ஏற்றி வரும் போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதைத் தவிர அங்காரகார தோஷம் அல்லது கடன் பிரச்சனை உள்ளவர்கள் இதே தீபத்தை கோவிலில் நவகிரகத்தில் உள்ள அங்காரகாரகன் முன் ஏற்றலாம். அதற்கு ஒரு பேப்பர் தட்டில் துவரையை போட்டு இந்த தீபத்தை ஏற்றி நவகிரகத்தில் வணங்கி வந்தால் இந்த தோஷங்கள் கடன் பிரச்சனைகள் போன்றவை தீரும்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டு விட்டு வெளியே சென்றால், செல்லும் காரியம் 100% வெற்றிதான்.

இந்த தீப வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்தால் உங்களுடைய நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்களுக்கும் இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -